Tamilnadu

இராஜபாளையத்தை மிரள வைத்த ராஜேந்திர பாலாஜி!! திமுகவினர் அதிர்ச்சி!!

Rajendra balaji
Rajendra balaji

தமிழக அரசியல் களத்தில் நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது இராஜபாளையம், இங்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுவதால் இந்த தொகுதி அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது, திமுகவை சேர்ந்த அத்தனை மாவட்ட நிர்வாகிகளும் ராஜேந்திர பாலாஜியை வீழ்த்த வேண்டும் என தொகுதியில் களம் இறங்கினர்.


ஆனால் இராஜபாளையம் அரசியல் களம்  தற்போது மஞ்சள் மயமாக மாறிவருகிறது, எங்கு பார்த்தாலும் அதிமுகவினர் களப்பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர், தற்போதைய சிட்டிங் எம். எம். ஏ தங்கபாண்டியன் என்ன செய்கிறார் என திமுகவினரே கேட்கும் அளவிற்கு அதிமுகவின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது, ஒட்டு மொத்த அதிமுக மாவட்ட நிர்வாகமும் ராஜபாளையத்தில் வார்டு வார்டாக களப்பணியாற்றி வருகின்றனர்.

திமுகவிலோ சிட்டிங் ராஜபாளையம் எம்எல்ஏ தங்கபாண்டியனுக்கும்,  திமுக எம்பி தனுஷ் குமார் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் பணிபோராக நடைபெற்று வருகிறது, இதனால் திமுகவினர் எந்த பக்கம் செல்வது என கலகத்தில் உள்ளனர், தமிழக அமைச்சர்கள் அனைவரையும் வீழ்த்துவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்த நிலையில் ராஜபாளையம் தொகுதியில் தற்போது திமுக வேட்பாளர் தோல்வி முகத்தில் இருப்பது திமுக தலைமையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் தொகுதியில் வெற்றி முகத்தில் இருக்க அவரது தனிப்பட்ட செல்வாக்கு, அனைத்து சமுதாயமக்களையும் அரவணைத்து செல்வது, கட்சியினர் மத்தியில் ஒற்றுமையை உண்டாக்கியது,  பாதாள சாக்கடை திட்டத்தை நடைமுறைப்படுத்தியது, நீண்ட நாட்களாக தொகுதி மக்களின் கோரிக்கையான இரயில்வே மேம்பலாம் பணியை துரித படுத்தியது.

அனைத்து ஆலயங்களுக்கும்  சென்று அனைத்து ஊர் மக்களின் ஆதரவை பெற்றது, கொரோனா காலத்தில் அம்மா உணவகம் மூலம் இலவச உணவு கொடுத்தது, தொகுதி மக்களின் சுப துக்க நிகழ்ச்சிகளில் நேரடியாக சென்று மக்களோடு மக்களாக கலந்துகொள்வது ஆகிய காரணங்கள் ராஜேந்திர பாலாஜியின் வெற்றியை ராஜபாளையத்தில் உறுதி செய்துள்ளது.