Tamilnadu

ஆர் எஸ் எஸ் குறித்த கேள்வி ரவீந்திரன் துரை சாமி கொடுத்த பதில்மக்களிடமே விட்டு விடுவதாக "கதறிய" டிபேட்டர்!

Ravindran Duraisamy
Ravindran Duraisamy

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை பாஜகவின் கிளை செயலாளர் எனவும் சங்கி எனவும் ஆளும் திமுகவை சேர்ந்த சிலர் விமர்சனம் செய்துவந்த சூழலில் தற்போது அதற்கு பதில் அளிக்கும் விதமாக சீமான் பேசிய பேச்சு கடும் வைரலானது . i


சென்னை அம்பத்தூரில் அப்துல் ரவூப் என்கிற தமிழ் தேசிய தொண்டருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் 26 ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகனின் கைதை எதிர்த்து குரல் கொடுக்கும் திமுக வழக்கறிஞர்கள், மாரிதாஸின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்? மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை 4 நாளில் மாரிதாஸ் வழக்கில் இருந்து வந்துள்ளார் இது தமிழக அரசுக்கு அவமானம் எனவும் திமுக அரசு தான் உண்மையான  சங்கி எனக்கூறி தன் காலில் இருந்த செருப்பை தூக்கி கான்பித்து சைகை செய்தார் சீமான்.

மேலும் பேசிய சீமான் நான் ஜனநாயகவாதியாக இருக்க வேண்டியதை பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.. என்னை வெறியனாக மாற்றிவிட வேண்டாம் என்று பேசியது  ஆளும் தரப்பை அதிர்ச்சியடைய செய்தது அவர் மீது காவல் நிலையத்தில் திமுகவினர் புகார் கொடுத்தனர் இந்த சூழலில் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் சீமான் சங்கியா ஆர் எஸ் எஸ் இயங்குகிறதா என்ற தொனியில் கேள்வி எழுப்பினார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மாதேஷ் என்பவர்.

இதற்கு ரவீந்திரன் துரைசாமி கொடுத்த பதில்தான் டாப் ஆர்.எஸ்.எஸ் என்ன தவறான இயக்கமா? எனக்கு ஆர்.எஸ்.எஸ் மீது நன்றி உணர்வு உள்ளது, இப்போதும் நாட்டிற்கு ஒரு பிரச்சனை என்றால் உயிரை கொடுக்க ஆர் எஸ் எஸ் இயக்கத்தினர் முன்வருவார்கள் என பதில் அளித்தார் இது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நபரை அதிர்ச்சிக்கு உள்ளாக்க ஆர் எஸ் எஸ் குறித்த உங்கள் பார்வையை மக்களிடமே விட்டு விடுவதாக கதறிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது.