Tamilnadu

"ரவுடியில்லை பிராடு" நயன்தாரா"பேமஸ் டயலாக் பாணியில், நீங்க நடத்துவது சேனலா தனியார் நிருபரை ஓட விட்ட அண்ணாமலை !

annamalai
annamalai

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் உள்ள அக்கட்சி அலுவலகமான கமலாலயத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.


இந்த நாள் நேரத்தை குறித்து வைத்து கொள்ளுங்கள் தமிழக அரசின் தவறான பொருளாதார நடவடிக்கை காரணமாக கடன் சுமை அதிகரித்து கொண்டே செல்கிறது, குறிப்பாக அடுத்த வருடம் அதிகபட்சம் கடன் வாங்கும் அளவை தமிழக அரசு எட்டிவிடும், பின்பு அரசு அதிகாரிகளுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாத சூழல் உண்டாக போகிறது இந்த நாள் இந்த பேட்டியை நீங்கள் மனதில் வைத்து கொள்ளுங்கள் என குறிப்பிட்டார் அண்ணாமலை.

அத்துடன் அரசின் நோக்கம் 20 ரூபாய்க்கு குவாட்டர் பாட்டிலை வாங்கி 150 ரூபாய்க்கு விற்பதுதான் சாதனையா இதுதான் அரசு செய்ய வேண்டியதா எனவும் கேள்வி எழுப்பினார் அண்ணாமலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் இல்லை மத்திய அரசு டீசலுக்கு 10 ரூபாயும், பெட்ரோலுக்கு 5 ரூபாய் குறைந்த பின்பும் தமிழக அரசு விலையை குறைக்காதது ஏன் என்று கண்டித்து தான் போராட்டம் நடத்த இருப்பதாகவும் ஆணித்தரமாக தெரிவித்தார்.

பா.சிதம்பரம் குறித்தும் கடுமையாக சாடிய அண்ணாமலை, பெட்ரோல் பாண்ட் என்ற ஒன்றை உண்டாக்கி கடன் வாங்கிவிட்டு சென்றார் இன்று அதற்கு நாம் அனைவரும் வட்டியும் முதலும் சேர்த்து கட்டி கொண்டு வருகிறோம் என விளாசினார் அண்ணாமலை.

இறுதியில் தனியார் யூடுப் சேனலை சேர்ந்த யூடுப்பர் ஒருவர் அண்ணாமலையிடம் வாங்கி கட்டி கொண்டார் என்றே சொல்லவேண்டும், படகில் சென்றது குறித்து கேள்வி எழுப்பினார், அதற்கு அண்ணாமலை உங்களை போன்ற நபர்கள் கொளத்தூர் கோபாலபுரம் சென்று அங்கு மக்கள் நிலைமையை எடுத்து சொன்னால் நான் படகில் செல்ல வேண்டியது இல்லை என தெரிவித்தார்.

மேலும் போட்டோ சூட் நடத்தினால் தான் மக்களுக்கு தெரியும், நீங்கள் ஊடகத்தில் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் அதை தானே செய்து கொண்டு இருக்கிறீர்கள், நாளை முதல் வீடியோ ஆடியோ இல்லாமல் வெறும் கடிதத்தில் என்ன பேசினோம் என மக்களுக்கு சொல்லுங்கள் தனியாக பேட்டி கொடுக்கவா என வெளுத்து எடுத்தார்.

அதோடு நில்லாமல் நீங்கள் எங்கள் சேனலுக்கு பேட்டி கொடுக்க வேண்டும் என அந்த யூடுப் பக்க நிருபர் கேட்க நீங்கள் நடத்துவது நியூஸ் சேனல் இல்லை, ப்ரோபகெண்டா எனவும் முதலில் நியூஸ் சேனல் பொதுவாக நடத்துங்கள் அப்புறம் பேட்டி கொடுக்கிறேன் என ஓட ஓட இறுதி வரை வெளுத்து எடுத்துவிட்டார் அண்ணாமலை.

அண்ணாமலை  யூடுப் நிருபர் இடையே நடந்த உரையாடல்கள், தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிகை நயன்தாரா விஜய் சேதுபதியை பார்த்து நீங்கள் ரவுடியில்லை பிராடு என தெரிவிப்பார் அந்த வசனம் தமிழகத்தில் பிரபலமானது, அதே போன்று அண்ணாமலை நீங்கள் நியூஸ் சேனல் இல்லை ப்ரொபோகேண்டா சேனல் என குறிப்பிட்டது ஒன்று என நெட்டிசன்கள் இப்போதே மீம் போட்டு கலாய்த்து வருகின்றன.

அண்ணாமலை பேசிய முழு பேட்டி கீழே இணைக்கப்பட்டுள்ளது, கடைசி 5 நிமிடம் நிருபர் ஒருவரை அண்ணாமலை விளாசிய பேட்டி இடம்பெற்று இருக்கிறது