Cinema

"ஜெய்பீம் புகழ்" சந்துரு குறித்து பரபரப்பு தகவலை தெரிவித்த முன்னாள் இன்ஸ்பெக்டர் , "சூர்யாவிற்கும்" எச்சரிக்கை !

jai bhim and surya
jai bhim and surya

முன்னாள் எம்.எல்.ஏ  ஜெபமனியின் மகனும் சட்டம் ஒழுங்கு காவல்துறையில் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மோகன்ராஜ், இவர் பல்வேறு வழக்குகளில் நீதி மன்றங்களில் போராடி நீதி கிடைக்க செய்தவர், இவர் தற்போது நீதிபதி சந்துரு குறித்து தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


அதில் வழக்கறிஞராக சந்துரு பணியாற்றிய காலங்களில் என்ன நடந்தது எனவும், ஜெயலிதா, கருணாநிதி ஆகியோர் மீது கொடுக்கப்பட்ட ஊழல் குற்றசாட்டுகளை கிடப்பில் போட்டார், அது மட்டும் இன்றி சூர்யா சந்துரு உடன் சேர்ந்து ஆடாதே எனவும், இந்து மதத்தை யார் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது எனவும் பல்வேறு உண்மை சம்பவங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது, ஜெய்பீம் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை மட்டுமல்ல அதில் குறிப்பிட படும் பிரபலங்கள் குறித்த பல்வேறு கடந்த கால தகவல்களையும் ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வருகிறது. அதில் தற்போது ஜெபமணி மோகன்ராஜ் தெரிவித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெபமணி மோகன்ராஜ் பல்வேறு நீதிமன்ற ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க தனி நபராக சட்ட போராட்டம் நடத்தியவர் என்பதும் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் அவரது குற்றசாட்டுகள் உண்மையாக இருக்கும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.

வைரல் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.