Tamilnadu

பள்ளி "மாணவி" கர்ப்பம் கைது செய்யபட்ட மாணிக்கம்! சுபவீக்கு சிக்கல்!!


பள்ளி மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மாணிக்கம் என்பவன் கைது செய்யபட்டான், உறவினர் பெண்ணை தவறாக பயன்படுத்தி மிரட்டி இரண்டு முறை பலாத்காரம் செய்துள்ளான் மாணிக்கம் என்ற ஆசிரியர் இவன் தீவிர பெரியார் கொள்கை கொண்டவன் என தன்னை அடையாள படுத்தி கொண்டதுடன் தனது முகநூலில் யோக்கியன் போன்று சமூக நீதி சமத்துவம் என பேசி வந்துள்ளான்.


இந்த சூழலில் மாணிக்கத்தை காவல்துறை கைது செய்து போஸ்கோ வழக்கில் சிறையில் அடைந்துள்ளது, பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய நபரின் புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் அவர் சுபவீரபாண்டியன் உடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சூழலில் பலரும் சுபவீரபாண்டியனை விமர்சனம் செய்து வருகிறார்கள், பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய நபருடன் சுபவீக்கு எந்த வகையில் உறவு? பல முறை சந்தித்து பேசியிருக்கிறார் என்ன காரணம்? பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட போது பகவான் கிருஷ்ணரை மேற்கோள் காட்டி சர்ச்சை கருத்தை தெரிவித்து இருந்தார் வீரமணி.

இப்போது ஒரு ஆசிரியர் ஒருவன் பள்ளி மாணவியை கர்ப்பம் ஆக்கியிருக்கிறான் பொறுப்பான ஆசிரியர் பணியை அவமான படுத்தி இருக்கிறான், மேலும் அவன் சுபவீயுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் இருக்கின்றன இப்போது சுபவீ என்ன பதில் சொல்ல போகிறார் என்ற பல்வேறு கேள்விகளை இணைய வாசிகள் எழுப்பி வருகின்றனர்.

கிருஷ்ணர் மீதே குற்றசாட்டு வைத்த வீரமணி சுபவீக்கு என்ன பதில் வைத்து இருக்கிறார் என்ற பல்வேறு கேள்விகள் சுப வீரபாண்டியனை மட்டுமல்ல வீரமணியை நோக்கி எழுந்துள்ளன, இந்த விவகாரம் பூதாகரமாக கிளம்பினால் பல சிக்கல்கள் எழும் என்பதால் இந்த விவகாரத்தை பெரியாரிஸ்ட் அமைப்புகள் மூடி மறைத்து வருவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

தற்போது கைது செய்யபட்ட மாணிக்கம் உடன் சுபவீ பலமுறை எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் நிலையில் புதிய சிக்கல் சுப.வீக்கு உண்டாகியுள்ளது.

More watch videos