Tamilnadu

முதற்கட்ட " தகவலை " வெளியிட்டார் அண்ணாமலை சவால் விட்ட செந்தில் பாலாஜி ஷாக் ! இது வேற லெவல் !அடுத்து எந்த அமைச்சர்?

annamalai senthilbalaji
annamalai senthilbalaji

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலஜோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது,கடந்த கால ஆட்சியின் தவறுகளை சரிசெய்யும் வண்ணம் தான் தற்போது மின்வாரியத்தின் செயல்பாடுகள் உள்ளது எனவும் 


இந்நிலையில் மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது குறித்து தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எப்போது எங்கு வெளியிட்டாலும் அங்கு தான் வர தயார் என்று கூறினார். அதுமட்டுமின்றி தன்னிடம் உள்ள ஆதாரங்களை 24மணி நேரத்தில் வெளியிட வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலைக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி காலவகாசம் வழங்கினார்.

எனவே தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள இது போன்ற செய்திகளை வெளியிடுகிறார்கள் ஆதாரம் இருந்தால் வழக்கு தொடுங்கள் அதையும் சந்திக்க தயார் என்று திட்டவட்டமாக கூறினார். இந்நிலையில் செந்தில் பாலாஜி 24 மணி நேரம் டைம் கொடுத்த நிலையில் ரெண்டு மணி நேரத்தில் ஆதாரத்தை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் :- தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் (டிடிபிஎஸ்) ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த பல மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை.  பில் அனுமதிக்கு 4% கமிஷனை எடுத்துக் கொண்ட பிறகு சமீபத்திய நாட்களில் திடீரென்று INR 29.64 கோடி பணம் செலுத்தப்பட்டது, இதற்கு பதில் கூறுங்கள் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கேட்டுள்ளார் அத்துடன்.,

தற்போது நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை தமிழ்நாட்டின் மின்துறை அமைச்சர் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்?அவரது சென்னை வீட்டில் அமர்ந்திருக்கும் 5 ‘ஆலோசகர்களுக்கு’ இந்த 4% எங்கே சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது என்பது தெரியும் எனவும் அதிரடியாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இந்த வாரம் - அனல் அடுத்த வாரம் - சூரிய ஒளி மின்சார  அதற்கு அடுத்த வாரம் - தயாராகிக் கொண்டிருக்கும் ‘பெரிய’ நிறுவனம் என எச்சரிக்கை விடுத்துள்ளார் அண்ணாமலை.

ஆதாரம் எங்கே என செந்தில் பாலாஜி சவால்விட்ட நிலையில் இரண்டே மணி நேரத்தில் முதற்கட்ட தகவலை  வெளியிட்டுள்ளார் அண்ணாமலை, தற்போது செந்தில்பாலாஜி நிலை மிகவும் சந்தேகத்திற்கு உரியதாக மாறியுள்ளதால் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அண்ணாமலை பொறி வைத்து பேச அந்த பொறியில் தானாக வந்து சிக்கிவிட்டார் செந்தில்பாலாஜி அடுத்து எந்த அமைச்சரோ என்ன தகவல்  வெளியாக போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது ?