Tamilnadu

வெடிக்கும் வார்த்தை போர் சப்போர்ட் செய்வதாக எண்ணி முதல்வர் ஸ்டாலினை கோர்த்துவிட்ட சுந்தரவள்ளி!

Sundaravalli and Annapurani
Sundaravalli and Annapurani

அன்னபூரணி அரசு அம்மாள் என்ற பெயரில் பெண் சாமியார் வேஷம் போட முயன்ற பெண்ணின் கடந்த கால வரலாறு வெளியான நிலையில் அவரை பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்ற சூழலில் அன்னபூரணி என்ற பெண்ணிற்கு ஆதரவாக கேள்வி எழுப்பிய சுந்தரவள்ளிக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர். அன்னபூரணி அரசு அம்மா” என்கிற பேஸ்புக்அக்கவுண்ட்டில் வழியாக தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு, பொதுமக்கள் பக்தி பரவசத்தில், பூஜை செய்யும் வீடியோக்களை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்திய திடீர் பெண் சாமியார் அன்னபூரணி.


இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனின் நெறியாளராக இருந்த நிகழ்ச்சியில், தன்னுடைய கள்ள காதல் பிரச்சனைக்காக கலந்துகொண்டிருந்தார். அதன் பிறகு தற்போது அன்னபூரணி சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகியுள்ளார். இதுகுறித்து பிரபல தனியார் தொலைக்காட்சிஇணையதளத்திற்கு பேட்டி கொடுத்துள்ள இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன். “அந்தப் பெண்ணின் வீடியோக்கள் நிறைய வந்திருக்குன்னு நினைக்கிறேன். அந்த வீடியோக்களையெல்லாம் பார்த்தபோது எனக்கு சிரிப்புதான் வருகிறது. அதேசமயம், மக்கள் ஏமாந்துப் போறாங்களேன்னு மனசு ரொம்ப கஷ்டமாவும் இருக்கு.

அன்னபூரணியின் கடந்தகால தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியோ, அவரின் நடத்தைக் குறித்தோ நான் எதையும் விவாதிக்க விரும்பவில்லை. அது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை. அதுகுறித்துப் பேசுவது சரி கிடையாது. ஆனால், இந்த மாதிரி சாமி என்று சொல்பவர்களின் காலில் மக்கள் விழுவது ரொம்ப ரொம்பத் தப்பான விஷயம். முட்டாள்தனமும்கூட.


சாமி என்று சொல்வதை மக்கள் நம்புவது பரிதாபமாக இருக்கிறது. எவ்வளவு நாட்கள் நாம் ஏமாற ரெடியாக இருக்கிறோமோ, அதுவரை நம்மை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். இதில், எந்த சாதி, எந்த மதம் என்றெல்லாம் வேண்டாம். எல்லாவற்றிலும் இருக்கிறார்கள். அதனால், ’நான் கடவுளின் அவதாரம்’ என்று சொல்லிக்கொண்டு வருபவர்களை மக்கள் நம்பக்கூடாது. சிந்தித்து கண் விழித்துக்கொள்ளவேண்டும். அதுதான் முக்கியமானது” என தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் போலி பெண் சாமியாருக்கு எதிராக கருத்துக்கள் வைரலாகி வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக சுந்தரவள்ளி கேள்வி எழுப்பியுள்ளார் அதில்., அன்னபூரணி ஆதிபராசக்தி என்றதும்  எல்லோருக்கும் கோபமும் கிண்டலும் வருகிறது, பங்காருஅடிகள்  ஆதிபராசக்தியின் அவதாரமாக  சொல்லிக் கொள்கிறார் நித்யானந்தா  சிவன் திருமால் அவதாரமாக சொல்லிக் கொள்கிறார் அப்போது வராத கோபம் கிண்டலும் இப்போது ஏன் வருகிறது, பக்தியில இதெல்லாம் சாதாரணமப்பா என கேள்வி எழுப்பியுள்ளார், இந்த சூழலில் நீங்கள் விமர்சனம் செய்த பங்காரு அடிகளாரைதான் முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆசி பெற்று வந்தார்.

அவரிடம் கேட்க வேண்டியதுதானே ஏன் என்று பங்காரு அடிகளார் ஆதரவாளர்கள் சுந்தரவள்ளியை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர், அன்னபூராணிக்கு ஆதரவாக கேள்வி எழுப்பி முதல்வரையும் நெட்டிசன்களிடம் கோர்த்து விட்ட சுந்தரவள்ளியின் செயல்  விமர்சனத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. பெண் ஒருவர் அன்னபூரணியை விமர்சனம் செய்து கேள்வி எழுப்பிய வீடியோவும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது அது கீழே இணைக்கப்பட்டுள்ளது.