Tamilnadu

கூட்டத்தை ஏற்பாடு செய்தது காங்கிரஸ் பொங்கல் வைத்து படையல் போட்டது பாஜக இளம் பெண்கள்! பரபரப்பு சம்பவம்!

Priyanka
Priyanka

உத்திரபிரதேசம் :-டிசம்பர் 26 அன்று, உத்திர பிரதேசம் ஜான்சியில் நடந்த காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் மாரத்தான் மற்றும் பேரணியில் கலந்து கொண்ட பெண்கள் குழு மோடி-மோடி மற்றும் யோகி-யோகி என்று கோஷமிட்டது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. காங்கிரஸின் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு ஆதரவாக பெண்கள் கோஷங்கள் எழுப்பிய பல வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகின்றன.டைம்ஸ் நவ் பத்திரிகையாளர் ஸ்வேதா பட்டாச்சார்யா, பேரணியில் மோடி-யோகி என்று கோஷமிட்ட சிறுமிகளிடம் காங்கிரஸ் கட்சியினர் தவறாக நடந்து கொண்டதாக ட்வீட் செய்துள்ளார். 


அவர், “இந்தப் படங்கள் ஜான்சியில் பிரியங்கா காந்தியின் மாரத்தான்!  காங்கிரஸார் அவர்களிடம் தவறாக நடந்து கொண்டபோது, ​​சிறுமிகள் அவர்களிடம் ‘லட்கி ஹைன் லட் சக்தி ஹை’ என்று கூறி, மோடி-மோடி, யோகி-யோகி என முழக்கங்களை எழுப்பி காங்கிரஸுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.  "லட்கி ஹன் லட் சக்தி ஹன் (நான் ஒரு பெண், என்னால் சண்டையிட முடியும்)" என்பது பிரியங்கா காந்தி தனது உ.பி.யில் பிரச்சாரத்தில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.மாரத்தான் ஓட்டப்பந்தயம் துவங்கும் பொழுது மாணவிகள் மோடி மோடி என்று முழக்கம் போட்டதை பார்த்த  காங்கிரஸ் கட்சியினர் நாம் ஏற்பாடு செய்த போட்டியில் கலந்துகொண்ட இவர்களையே பிரியங்காவினால் கவர முடியவில்லை.

இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துவரும் பிரியங்காவை நம்ப அக்கட்சி தொண்டர்களே மறுத்து வருகிறார்கள்  இதில் மற்றொரு நகைச்சுவை என்னவென்றால்., யோகி அரசு இந்த மாரத்தானுக்கு அனுமதி அளிக்க வில்லை என்றால் தடையை மீறி ஜான்சி ராணிகள் வலம் வருவார்கள் என்றார் பிரியங்கா.! ஆனால் ஜான்சி ராணிகள் மோடி மோடி என்று முழங்கி காங்கிரஸ்.     முகத்தில் கரியை பூசி விட்டார்கள் என்கின்றனர் பாஜகவினர். வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.