Cinema

சூர்யாவை மொத்தமாக கைவிட்ட "இருவர் ".. மனைவி தந்தையிடம் கதறல்...?

suriya
suriya

நடிகர் சூர்யாவிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திரை அரங்கில் வெளியாகி இருக்கும் திரைப்படம் "எதற்கும் துணிந்தவன் "..சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 


'ஜெய் பீம்' படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சூர்யா வழக்கறிஞராக வருகிறார். படத்தின் துவக்கத்தில் காவல்துறை கண்காணிப்பாளர், கல்லூரி பேராசிரியர் உள்ளிட்ட 5 பேரை சூர்யா கொலை செய்கிறார். அவர் ஏன் அப்படி செய்கிறார், உண்மையில் என்ன நடந்தது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கும் படம்தான் எதற்கும் துணிந்தவன். 

கண்ணபிரான் என்ற வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார், திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிய நிலையில் தற்போது படம் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது பல திரையரங்குகளில் படத்தை பார்க்க 10% நபர்கள் கூட இல்லாத காரணத்தால் பல காட்சிகள் ரத்து செய்யபட்டுள்ளன.

படம் வெளியாகும் முன்பே பாமகவினர் பல இடங்களில் சூர்யா படத்தை திரையிட கூடாது என திரையரங்கு உரிமையாளர்களிடம் மனு கொடுத்தனர். இந்த சூழலில் சூர்யா தரப்பு மிகவும் எதிர்பார்ப்பில் இருந்ததாம் அதாவது தனது படத்தை இலவசமாக விமர்சனம் செய்து பாஜக மற்றும் பாமக தொண்டர்கள் வெற்றி படமாக மாற்றி விடுவார்கள்.

நிச்சயம் பேசு பொருளாக மாறினால் அது வசூலை வழங்கும் என்றும் கணக்கு போட்டு இருக்கிறது சூர்யா தரப்பு, ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொழுதுபோக்கு திரைப்படங்களை விமர்சனம் செய்வதை பாஜகவினர் விட்டு விட்டு இலவச விளம்பரம் தேடி தருவதை நிறுத்துங்கள் என அறிக்கை வெளியிட்டார்.

இதையடுத்து பாஜகவினர் சூர்யா திரைப்படத்தை விமர்சனம் செய்யவில்லை மாறாக பாமக மூலம் விளம்பரம் கிடைக்கும் என கணக்கிட்டு இருந்திருக்கிறது பட குழு, அவர்களும் பெரிய அளவில் எதிர்ப்பை பதிவு செய்யாத சூழலில்பாஜக பாமக என இரண்டு தரப்பும் கைவிட்டு விட்டது, திரைப்படமும் சுமாராக இருப்பதால் படத்தை பார்க்க யாருமே பெரிய அளவில் செல்லாத சூழல் உண்டாகி இருக்கிறது.

ஜெய்பீம் திரைப்படம் வெற்றி என ஊடகங்களும் சூர்யா ஆதரவு நபர்களும் கொடுத்த பில்டப் இப்போது திரையரங்கில் வெளியாகிய எதற்கும் துணிந்தவன் படம் மூலம் பொய்த்து போயுள்ளது, இரண்டு வருஷம் கழித்து படம் வருவதால் வெள்ளி விழா தொடங்கி வெற்றி விழா என கொண்டாட சூர்யா தயாரான நிலையில் படம் குறித்து வரும் தகவலால் அதிர்ச்சியில் உறைந்துள்ளராம் சூர்யா.

தேவையில்லாமல் அரசியல் பேசி இப்போது திரையரங்கில் ஒரு படமும் ஓட வில்லையே என தனது மனைவி மற்றும் தந்தையிடம் சூர்யா புலம்பி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மத்திய அரசை விமர்சனம் செய்து பல்வேறு நபர்கள் திரைப்படங்கள் வெளியான நிலையில் பல படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருகின்றனஅந்த வரிசையில் தற்போது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் இடம் பெற்றுள்ளது.

பாலிமர் இது குறித்து வெளியிட்ட வீடியோ பின்வருமாறு :-