Tamilnadu

அந்த "ஈன புத்தி" எங்களுக்கு கிடையாது பரவிய செய்தியை சுட்டிக்காட்டி TTV தினகரன் ஆவேசம் !

TTV Dhinakaran pointing the News
TTV Dhinakaran pointing the News

அமமுக தொண்டர்கள் முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி பன்னீர்செல்வம் ஆகியோர் கார்களை வழிமறித்து  மோதலில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து ttv தினகரன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார் இது குறித்து அவர் தெரிவித்தது பின்வருமாறு :-


எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது என்னுடைய தூண்டுதலில் தொண்டர்கள் தாக்குதல் நடத்த முயன்றதாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக  தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்தேன்.பழனிசாமி & கம்பெனியினர் போல கட்சியினுடைய தலைமை அலுவலகத்திலேயே தொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்களை ஏவி, கட்சித் தொண்டர்களைத் தாக்கும்  ஈன புத்தி எங்களுக்கு கிடையாது. அதுவும் நாங்கள் போற்றி வணங்குகின்ற பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரும்,

இதயதெய்வம் அம்மா அவர்களும் துயில் கொள்ளும் புனித இடத்தில் இப்படியெல்லாம் நடந்து கொள்வதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்கள் இவர்களைப் போல மனசாட்சி துளியும் அற்ற துரோக கும்பல் அல்ல.அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது. இன்றைய தினம் அம்மா அவர்களின் நினைவிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த தமிழக காவல்துறையினருக்கே இந்த உண்மை தெரியும் என ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார் TTV தினகரன்.