Tamilnadu

வெடித்த இரண்டு கண்களை சரி செய்த பாதிரியார் டாக்டர் படத்தை மிஞ்சிய காமெடி காட்சிகள் இறுதியில் வச்சான் பாரு ட்விஸ்ட் !

abragam charles
abragam charles

பாஸ்டர் ஆப்ரஹாம் சார்லஸ் என்பவர் செய்த புரளி வித்தைகள் தற்போது இணையத்தில் கடும் விவாதத்தையும் சிரிப்பலைகளையும் உண்டாகியுள்ளது , தொழில்நுட்பமும் அறிவியலும் வளர்ந்த இந்த காலத்திலும் இப்படிப்பட்ட நபர்கள் இருக்கிறார்களா என்ற சந்தேகத்தையும் முற்போக்குவாதிகள் எழுப்புகின்றனர் .


பாதிரியார் ஆப்ரஹாம் சார்லஸ் என்பவர் வாய் பேச முடியாத சிறுவனை தொண்டைக்குழியில் கையை மட்டும் வைத்து சரி செய்துள்ளார் , குறிப்பாக மருத்துவரால் முடியாத சாதனையை வெறும் கைகளை கொண்டே சரி செய்து அசத்தினார் , இதை பார்க்குமனைவருக்கும் இது திட்டமிட்ட நாடகம் என்பது தெளிவாக தெரிகிறது .

அடுத்ததாக அரங்கேறிய சம்பவம்தான் மாஸ் .காது கேட்காதவர் என ஒருவரை அழைத்து வந்து வெறும் சொடக்கு மட்டும் போட்டு காதினை கேட்க வைக்கிறார் பாதிரியார் , அதிலும் காது கேட்காது என கூறப்பட்டவர் , பாஸ்டர் கேட்ட கேள்விக்கு கையை அசைத்து தலையை ஆட்டி தனக்கு காது கேட்குமென மக்களுக்கு தெரியவைத்தது குழந்தைகளும் கண்டுபிடிக்கும் போலி காட்சி என்பது பார்ப்பவர்களையும் சிரிக்க வைக்கும் போலி காட்சி .

இவை இரண்டையும் மிஞ்சும் அளவு வேறு ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது அதுதான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய விசித்திர நோய்  , இரண்டு கண்களும் வெடித்து விட்டது என வாய் கூசாமல் பொய் சொல்கிறார் ஒருவர் அவருக்கு கையை வைத்தே சிகிச்சை அளிக்கிறார்  பாஸ்டர் ஆப்ரகாம் , அதிலும் கண்ணுக்குள் குழி இருக்கு என சொல்ல தன் விசித்திர சக்தியை அரங்கேற்றி அவரது நோயை குணப்படுத்தினார் பாஸ்டர் , இதை பார்த்த அனைவரும் மிரண்டு போய்விட்டனர் . வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும் .

இவை தவிர்த்து விடீயோவின் இறுதியில் ஒரு ட்விஸ்ட் இருந்தது அதாவது பாஸ்டர் ஆப்ரஹாம் சார்லஸ் ஆசிகளை வாளி  போன்ற ஒன்றில் வீசியதாகவும் அதை தான் பிடித்து கொண்டேன் இப்போது 15 லட்சம் சம்பாரித்துவிட்டேன் என சொல்ல சமீபத்தில் வெளியான நகைச்சுவை படமான டாக்டர் படத்தையும் மிஞ்சியுள்ளது  காட்சிகள் . அனைத்தையும் கூட  தாங்கி  கொள்ளலாம் ஆனால் வாளியில் ஆசியை வீசினார் அதை நெஞ்சோடு பிடித்தேன் 15 லட்சம் சம்பாரித்தேன் என ட்விஸ்ட்  அடித்த சம்பவம் இப்படியெல்லாமா மக்களை முட்டாள் ஆக்கும் நபர்கள் இருப்பார்களா என கேள்வி எழுந்துள்ளது .