Cinema

மன்சூர் அலிகான் வீட்டிற்கு சீல் பிரதமரை அவதூறாக பேசியவர் பொது சொத்தை திருடியது அம்பலம்!

mansoor ali khan
mansoor ali khan

பிரதமர் மோடியை திருடன் என பேசியவர் மன்சூர் அலிகான் மேலும் பல்வேறு வகைகளில் நாட்டின் பிரதமரை ஒருமையில் அவதூறாக பேசிவந்தவர், அத்துடன்  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை அவதூறாக பேசிவந்துள்ளார் மன்சூர் அலிகான், கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறாக பேசினார் இந்த சூழலில் மன்சூர் அலிகான் அரசிற்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை திருடியது கண்டுபிடிக்கபட்டுள்ளது.


சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் உள்ள நடிகர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்வைத்துள்ளனர். அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுரஅடியை ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்ததால் சீல்வைக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் படி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மன்சூர் அலிகான் வீட்டுக்கு சீல் வைத்தனர். மன்சூர் அலிகான் பிரதமரை திருடன் என பேசிய நிலையில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆட்டையை போட்டு திருடி குடும்பம் நடத்தி வந்ததும், அதே திருட்டுஇடத்தில்  இருந்து கொண்டு ஊடகங்களுக்கு யோக்கியன் போல பேட்டி கொடுத்து வந்துள்ளார் மன்சூர் அலிகான்.

ஊழல் செய்தவர்களும் மக்கள் சொத்தை திருடியவர்கள் தங்கள் திருட்டில் இருந்து தப்பிக்க பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பி வருகின்றனர் என பாஜக ஆதரவாளர்கள் அப்போதே மன்சூர் அலிகான் பேச்சை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்து வந்தனர், அது இப்போது நிரூபணம் ஆகியுள்ளது. குறிப்பாக இணையத்தில் தங்களை யோக்கியன் போன்று பிரதமருக்கு எதிராக அவதூறுகளை பரப்புவரும் நபர்கள் பலர்..,

தங்கள் சொந்த வாழ்க்கையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிக்குகின்றனர் அதில் தற்போது மன்சூர் அலிகானும் இணைந்து உள்ளார். அரசிற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதும்   திருடுவதும் ஒன்று என நீதிபதிகளே பல்வேறு தீர்ப்புகளில்  தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது .