Cinema

காஷ்மீர் பைல்ஸ் திரைபட இயக்குனர் அப்படி என்னதான் அண்ணாமலை குறித்து தெரிவித்தார்...படு வைரல்!

Annamalai,  vivek agihotri
Annamalai, vivek agihotri

காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் விவேக் அக்கினி கோத்திரி அமெரிக்காவில் நடந்த நிகழ்வு குறித்தும் தமிழர் ஒருவர் பேசியது குறித்தும் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசியது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, அது பின்வருமாறு :-


விவேக் அக்னிஹோத்ரி: நான் சிக்காகோவில் இருந்த போது ஒரு தமிழருடன் பேசிய போது அவர், "நான் தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டேன்" என வருத்தத்துடன் தெரிவித்தார் - தமிழகம் மீதான அன்பு மிகுதியால். "என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?" என வருந்தினார். நான் சொன்னேன், "தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக நல்ல தலைவர் (ஹீரோ) எவரும் வரவில்லை. ஹீரோக்கள் தேவை. மிகுந்த மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்கிறேன்.

நாம் எதிர்பார்த்த ஹீரோ திரு அண்ணாமலை. உங்கள் ஆதரவுடன், அன்புடன் அவர் இந்திய / இந்து மறுமலர்ச்சியை (indic renaissance) தமிழகத்தில் கொண்டு வருவார் என்பது என் போன்ற லட்சோபலட்சம் மக்களின் ஆசை அதுதான் என இயக்குனர் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய அண்ணாமலை மஹாகவி பாரதி எப்போது உலகம் போற்றும் விஷ்வகுருவாகும் என ஒரு பாட்டில் சொல்கிறார், "சங்கராச்சாரியார் சென்ற இடத்துக்கு மரியாதை கொடுக்கக் கூடிய மனிதனும், செயற்கைக் கோளை வைத்து விஞ்ஞானத்தை வளர்க்கக் கூடிய மனிதனும் ஒரே மனிதனாக இருக்கும்பொழுது, இந்தியா உச்ச நிலையை அடையும்" என்று. அதை இன்று மோடி  செய்து கொண்டிருக்கிறார்!  என அண்ணாமலை தெரிவித்தார்.

இருவரும் பேசிய வீடியோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .