Tamilnadu

"பதவி விலகவேண்டும்"என தெரிவித்த திமுகவிற்கு ஆப்பு வைத்த ஆளுநர் இந்த முறை வேற லெவல்!

Rn ravi and stallin
Rn ravi and stallin

நீட் விலக்கு தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாத ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகவேண்டும் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு  தெரிவித்தார் பல திமுக தலைவர்களும் இதையே தெரிவித்தனர், இந்த சூழலில் ஆளுநர் ரவி தனது அறிக்கையில் நீட் தேர்விற்கு முன்பு அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படித்தது, மிக குறைவான எண்ணிக்கையில் எனவும் ஆனால் தற்போது 7.5% இட ஒதுக்கீடு காரணமாக அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு வந்த. பிறகு அதிக அளவில் தேர்ச்சி பெற்று இருப்பதாக அறிக்கை வெளியிட்டார்.


இதன் மூலம் நீட் தேர்வு நல்லது என்று உறுதி படுத்தி இருக்கிறார் ஆளுநர், இது ஒருபுறம் என்றால் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது துணை வேந்தர்களை  இனி தமிழக அரசே நியமிக்கும் வண்ணம் சட்டத்திருத்தம் செய்யபடும் என அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின், இந்த சூழலில்தான் இந்த ஆண்டு 6 துணை வேந்தர்களின் பதவி காலியாக இருக்கிறது, இதனை நேரடியாக ஆளுநரே நியமனம் செய்ய முடிவு எடுத்து இருப்பதாக ராஜ் பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது ஒரு புறம் என்றால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கணிசமான நிதியை மத்திய அரசே வழங்குகிறது, இந்த நிதிகள் முறையாக செலவு செய்யப்படுகிறதா என்பதை ஆளுநர் ஆலோசனை செய்ய முடிவு எடுத்து இருப்பதாகவும் விரைவில் ஆய்வினை தொடங்க இருப்பதாகவும் வெளியான தகவல்கள் தமிழக அரசை புரட்டி போட்டுள்ளது.

இது மட்டும் இன்றி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்ற கொலை சம்பவங்களை சுட்டிக்காட்டி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும்,557 சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதனை ஆளுநர் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.

இதை காட்டிலும் ஆளுநர் வைத்த அதிரடியில் ஆடி போயுள்ளது தமிழக அரசு என்றே கூறலாம் முக்கிய அமைச்சர் ஒருவருக்கு கீழ் 5 ஆயிரம் வாகனங்கள் வாங்க டெண்டர் விட தயாராகி வருவதாகவும் அதில் 2 ஆயிரம் வாகனங்கள் அமைச்சர் ஒருவர் பினாமி பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட இருப்பதாகவும் ஆளுநருக்கு புகார் சென்று இருக்கிறது.

இது குறித்து உடனடியாக சம்பந்தபட்ட துறைக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது இதனால் அந்த முடிவையே கைவிட ஆளும் தரப்பு முடிவு செய்துள்ளதாம், மொத்தத்தில் பதவி விலக வேண்டும் என அழுத்தம் கொடுத்த திமுகவிற்கு, ஊழல் எனும் அடிமடியில் கைவைப்பதுடன் தனது அதிகாரம் என்ன என்பதையும் ஆளுநர் தெளிவு படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னாள் IPS அதிகாரிகளான ஆளுநர் ஆர்என்ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடன் தற்போதைய மத்திய உளவுத்துறை அதிகாரி ரவிச்சந்திரன் ஆகிய மூன்று முன்னாள் இந்நாள் ஐபிஎஸ் அதிகாரிகள் இணைந்து மொத்தத்தில் திமுக அமைச்சரவையை தீவிரமாக கண்காணித்து வருகிறார்களாம் இதனால் கடும் சிக்கலில் சிக்கி என்ன செய்வது என பல அமைச்சர்கள் அமைதியாவிட்டானராம்.

(அடுத்த பதிவில் மத்திய அரசு, மமதையில் செயல்பட்ட IAS அதிகாரிகள் மீது நடத்திய சர்ஜிக்கள் ஸ்ட்ரைக் ஆடி போயிருக்கும் மாநில கட்சிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.)