Tamilnadu

சீமானை ஒரே வார்த்தையில் கலாய்த்த அண்ணாமலை விழுந்து விழுந்து சிரித்த நிருபர்!

Annamalai and Seeman
Annamalai and Seeman

பிரபல தனியார் பத்திரிக்கை ஒன்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையிடம் தற்போதைய அரசியல் சூழல், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தடை, நீட் எதிர்ப்பு தீர்மானம், சீமான் கருத்து ஆகியவை குறித்து பேட்டி எடுத்து பகிர்ந்துள்ளது.., இந்த சூழலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்த கேள்விக்கு அண்ணாமலை தெரிவித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இந்நிலையில் சீமான் பாஜகவை ஆதரிப்பது ஏன் என எங்களுக்கு தெரியும் என கூறினீர்களே அது ஏன் என்ற கேள்வியை நிருபர் முன்வைத்தார். அதற்கு அண்ணாமலை கொடுத்த பதில் பின்வருமாறு :-சீமான் எப்போது பா.ஜ.க-வை ஆதரித்தார்? பா.ஜ.க-வையெல்லாம் அவர் ஒருபோதும் ஆதரித்ததில்லை. மீடியா வெளிச்சம் தன் மீதும் விழ வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் பேசக்கூடியவர் சீமான்,அதைத்தான் நான் சொன்னேன்.

எந்த விஷயம் சூடாக இருக்கிறதோ, அந்த விஷயம் குறித்து ஒரு நிலைப்பாடு எடுத்துக்கொண்டு பேசுவார். மற்றபடி அரசியலில் அவருக்கென்று ஒரு சித்தாந்தம் இருப்பதாகவோ அல்லது ஒரு நிலைத்தன்மை இருப்பதாகவோ நான் பார்க்கவில்லை. காற்று அடிக்கிற திசையில் அரசியல் செய்துவருபவர் சீமான்!''''பா.ஜ.க-வை நான் ஆதரிக்கிறேனா அல்லது எதிர்க்கிறேனா என்பதுகூட தெரியாத ஒருவரைத்தான் ..,

தமிழக பா.ஜ.க-வுக்குத் தலைவராக்கியிருக்கிறார்கள் என்று சீமான் உங்களை விமர்சித்திருக்கிறாரே?''என நிருபர் மறு கேள்வி எழுப்பினார்.''சந்தோஷம் அவரது கருத்து அப்படியே இருக்கட்டும்! ஒருவேளை ஆமைக்கறி சாப்பிட்டால், சீமான் மாதிரி மூளை வளரும் என்று நினைக்கிறேன். ஆனால், எனக்கு ஆமைக்கறி கறி சாப்பிடும் பழக்கம் கிடையாது. இனி முயன்று பார்க்கிறேன்!''

என கூற .., பேட்டி எடுத்த நிருபர் தொடங்கி சுற்றி இருந்தவர்கள் வரை விழுந்து விழுந்து சிரித்து விட்டார்களாம்.அண்ணாமலை ஆமைக்கறி குறித்து பேச தற்போது மீண்டும் ஆமைக்கறி விவகாரம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.