Cinema

ஜீ தமிழுக்கு தாவிய விஜய் டிவி பிரபலம்..!! இது தான் விஷயமா!!

Vijay TV
Vijay TV

தமிழகத்தில் சின்னத்திரை சீரியல்களை எடுத்துக் கொண்டால் மிக முக்கியமான தொலைக்காட்சியின் சீரியல்கள் பல குடும்பங்களால் கொண்டாடப்பட்டு பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனலாக வலம் வருகிற ஒரு சேனல் தான் ஜீ தமிழ்! இந்த சேனலில் ஒளிபரப்பாகின்ற பல ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு மக்களை கவர்ந்திருக்கும் வகையில் பல புதிய தொடர்களையும் நிகழ்ச்சிகளையும் ஜீ தமிழ் அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. மேலும் ஒரு புதிய தொடரை அறிமுகப்படுத்துகிறது என்றால் அதற்கு விளம்பரப் படுத்துவதில் ஒரு முக்கிய தொலைக்காட்சியாக ஜீ தமிழ் தற்போது விளங்குவதும் குறிப்பிடத்தக்கது.


ஏனென்றால் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான புதிய தொடர்களுக்கு தங்கப்பரிசு மற்றும் பல பரிசு பொருட்களையும் கேட்கப்படும் கேள்விகளுக்கு வினாகளுக்கு பதில் அளித்தாள் தரப்படும் என்ற வகையில் பலருக்கு அந்த பரிசு பொருட்களை அள்ளி தங்கள் வாடிக்கையாளர்களையும் தங்கள் சீரியல்களின் டிஆர்பி ரேட்டையும் எகிற வைத்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் மீண்டும் ஒரு புதிய சீரியல் குறித்த அறிவிப்பை ஜீ தமிழ் வெளியிட்டுள்ளது. அந்த சீரியலின் பெயர் நெஞ்சத்தை கிள்ளாதே அதில் தற்பொழுது ரேஷ்மா நாயகியாக நடிக்க ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்க உள்ளார். அந்த சீரியலின் ப்ரோமோ வீடியோவையும் தற்போது ஜீ தமிழ் வெளியிட்டுள்ளது.

அந்த ப்ரோமோ வீடியோவில் இருசக்கர வாகனத்தில் சிக்னலில் இருக்கும் ரேஷ்மா பக்கத்தில் இருக்கும் கார் கண்ணாடியை பார்த்து நெற்றியில் பொட்ட வைக்க உடனே காரின் கண்ணாடியை இறக்கி ஜெய் ஆகாஷ் இது என்ன உங்க வீட்டு டிரெஸ்ஸிங் டேபிள் நினைச்சிங்களா ஒரு மேனஸ் இல்ல என்ற வகையில் கோபப்பட அதற்கு ரேஷ்மாவும் என் நெத்தியில்  தானே போட்டு வைத்தேன் உங்களுக்காக வைத்தேன் என்று பதிலுக்கு பேச, உடனே ஜெய் ஆகாஷ் சரியான திமிரு புடிச்சவளா இருப்பா போல என்று ஆவேசப்படுகிறார். அதற்கு ரேஷ்மா திமிரு புடிச்சவளா... திமிரு புடிச்சவள் என்ன பண்ணுவானு தெரியுமா? என்று தனது இருசக்கர வாகனத்தை கார் முன் நிறுத்த உடனே கிரீன் சிங்கலும் போடப்பட்டு விட்டது காரில் இருந்து ஜெய் ஆகாஷ் கீழே இறங்கி வரும் பொழுதே ரேஷ்மா அங்கிருந்து கிளம்பி விடுகிறார். 

இப்படி சாட் ஆன் ஸ்வீட்டாக வருகின்ற இந்த ப்ரோமோ பல ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. மேலும் இந்த ஜோடி சூப்பரா இருக்கும் போலையே... கெமிஸ்ட்ரி நல்லா இருக்கும் போலையே... எலியும் பூனையும் சண்டைனாவே நல்லா தானே இருக்கும் என்ற வகையில் பல கமெண்ட்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பான கிழக்கு வாசல் சீரியலின் ஹீரோயினாக நடித்து நல்ல வரவேற்பையும் கண்டு வந்த ரேஷ்மா தற்போது விஜய் டிவி பிடிக்காமல் திடீரென்று விஜய் டிவியை விட்டுவிட்டு மொத்தமாக ஜீ தமிழுக்கு வந்துள்ளது குறித்தும் சில பேச்சுக்கள் அடிபடுகிறது. முன்னதாக விஜய் விஜய் டிவியில் நடிப்பதற்கு முன்பாகவே ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற சீரியல் மூலமும் ரேஷ்மா பேமஸ் ஆனவர். இதனை அடுத்து விஜய் டிவிக்கு சென்று பிறகு மீண்டும் தற்போது ஜீ தமிழுக்கு வந்துள்ளார் இதன் பின்னணி என்ன என்பது குறித்து விசாரிக்கும் பொழுது விஜய் டிவியில் கொடுக்கப்பட்ட சம்பளத்தை விட ஜீ தமிழில் கொடுக்கப்படுகின்ற சம்பளம் அதிகம் என்பதால் தற்பொழுது இவர் ஜீ தமிழுக்கு மீண்டும் தாவி உள்ளதாக கூறப்படுகிறது.