Tamilnadu

என்னது வீடியோ ரிலீசாகுதா? யார் அந்த பெண் "செய்தி வாசிப்பாளர்" தமிழச்சி பகிர்ந்த தகவல் வெளியானது?

Tamilachi
Tamilachi

தமிழகத்தில் நகர்புற தேர்தல் முடிவுகள் குறித்து மக்களும் அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்தி கொண்டு இருக்க தற்போது மிக பெரிய அதிர்வலைகள் பெரியாரிஸ்ட்கள் மத்தியில் உண்டாகியுள்ளது அது குறித்து பெரியாரிஸ்ட் தமிழச்சி தெரிவித்த தகவல் இணையத்தில் வைரலாகியது.


ப்ரான்ஸ் நாட்டை சேர்ந்த தமிழச்சி என்ற பெண் தமிழகத்தில் பெரியாரிஸ்ட்கள் பலர், பெண்களை தவறான தங்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கி வருவதாக குற்றம் சுமத்தியதுடன், கொளத்தூர் மணி அலுவலகத்திற்கு எதிரே போராட்டத்திலும் ஈடுபட்டார். இந்த சூழலில் தற்போது அவர் தனியார் யூடுப் சேனல் ஒன்றிற்கு பேட்டி ஒன்றிணை கொடுத்தார், அதில்.,

சுப.வீ  பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும் தங்களது தேவைக்கு அந்த பெண் சுபாவீயையும், அந்த பெண் சுபாவீயையும் பயன்படுத்தி கொள்வதாக குற்றம் சுமத்தினார் மேலும் தனியார் தொலைக்காட்சி ஒன்றன் பெயரை குறிப்பிட்டும் அதில் இருவர் பெயரையும் குறிப்பிட்டார்.

இந்த சூழலில் பல்வேறு திருப்பங்கள் உண்டாகியுள்ளது அதாவது எந்த பெண் மீது தமிழச்சி குற்றம் சுமத்தினாரோ அந்த பெண் குறிப்பிட்ட தொலைக்காட்சியில் இருந்து வெளியேறி இருக்கிறாராம், பல்வேறு குற்றசாட்டு காரணமாக அவர் வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் என்றால் தமிழச்சிக்கு பல்வேறு முக்கிய பெரியாரிஸ்ட்கள் பெண்களிடம் சிலுமிஷத்தில் ஈடுபட்டது முதல் பல்வேறு வீடியோக்கள் இருக்கிறதாம்.

இனியும் திருந்தமாட்டார்கள் என நினைக்கும் நபர்களின் வீடியோவை அவர் ரிலீஸ் செய்ய இருப்பதாக தமிழச்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, மேலும் அதில் அந்த பெண் செய்தி வாசிப்பாளர் உடன் இருக்கும் வீடியோ இருப்பதாகவும் அன்று தமிழகத்தில் கடும் சலசலப்பு உண்டாகலாம் எனவும் கூறப்படுகிறது.

யார் அந்த பெண் செய்தி வாசிப்பாளர் என்ற கேள்விக்கு அன்று முடிவு கிடைக்கும் என்றும் அது மட்டுமில்லாமல் பல்வேறு பெரியாரிஸ்ட்களின் முகத்திரை கிழியும் என்றும் கூறப்படுகிறது. தமிழச்சி பகிர்ந்து கொண்ட முக்கிய தகவல் பின்வருமாறு :-