Tamilnadu

24 மணி நேரம் தாண்டுவதற்குள் ராகுல் வாங்கிய "பல்பு" இனி தமிழ்நாடு குறித்து பேசுவாரா?

Raghul gandhi
Raghul gandhi

தமிழகத்தை ஒரு போதும் பாஜக ஆட்சி செய்யமுடியாது என ராகுல் காந்தி குறிப்பிட்ட நிலையில் தற்போது காங்கிரஸ் தமிழகத்திற்கு செய்த செயல்களை பட்டியல் போட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து அண்ணாமலை ட்விட்டரில் ராகுலுக்கு அளித்த பதில் பின்வருமாறு :-


‘இன்று பார்லிமென்டில் ஸ்ரீ ராகுல் காந்திஜியின் திடீர்க் கூச்சல்  வழக்கம்போல் வேடிக்கையாக இருந்தது எங்களுக்கு. ‘பாஜக தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது’ என்று தன்னிச்சையாக குறிப்பிட்டுள்ளார் (உளறியுள்ளார்).

இந்த மாபெரும் தமிழ் மண்ணின் மகனாக, தமிழகத்தில் விரைவில் என்ன நடக்கப் போகிறது என்பதை ஸ்ரீ ராகுல் காந்திஜிக்கு நான்  எடுத்துக் கூறுகிறேன் (தமிழகத்துக்கு காங்கிரஸ் செய்த துரோகங்களை).

1. தமிழ்நாட்டை சில காலம் ‘நீங்கள் ஆட்சி’ செய்திருந்தீர்கள் ஒரு கட்சியாக. உங்கள் தாத்தா 1965இலும், உங்கள் தந்தை 1986இலும் தமிழகத்தில் ஹிந்தியைத் திணித்தார்கள்.  இப்போது NEP ஐ படித்துப் பாருங்கள் தயவுசெய்து. (தாய் மொழி / தமிழ் மொழி கட்டாயம்).

2. பெரியவர் காமராஜர் ஐயாவை அவமானப்படுத்தினீர்கள். 3. 1974ல் (தமிழகத்தின் பகுதியான) கச்சத்தீவை உங்கள் பாட்டி வெளிநாட்டிற்குக் கொடுத்தார்!

4. இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு உங்கள் கட்சிதான் காரணம். 2009ஐ நினைவில் கொள்ளுங்கள் (என்ன செய்தீர்கள் என்று)!(நீங்கள் சிதைத்த இலங்கை தமிழர்களுக்கு)  நமது மாண்புமிகு பிரதமரோ அவர்கள் வாழ்வை சீரமைக்க 50,000+ வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

5. ஜல்லிக்கட்டை, ‘காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு’ என்று சொல்லி தடை செய்தீர்கள் நீங்கள்.நமது மாண்புமிகு பிரதமரோ, நீதிமன்றங்களில் போராடி ஜல்லிக்கட்டை  தமிழ் மக்களிடம் மீட்டுக் கொடுத்தார். 

இதன் விளைவாக, திமுகவிடமிருந்து ஆக்சிஜன் சப்ளை பெற்று, நீங்கள் இப்போது ஐசியுவில் இருக்கிறீர்கள்!எங்கள் மாண்புமிகு பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை ஏற்றுக்கொண்ட மக்களால், நாங்கள் இப்போது புதுச்சேரியில் ஆட்சியில் இருக்கிறோம்!

அது ஒரு மைல் கல். அடுத்த தமிழ்நாடு!!தமிழ் மக்கள்  பாஜகவுடனும் பிரதமர் மோதியுடனும் உள்ளனர்.‘வரலாற்றை’ மறக்காதீர்கள் சார். (மறந்தால்) அதே தவறை மீண்டும் செய்வீர்கள் - அமேதியில் உங்களுக்கு நடந்தது போல்!

நீங்கள்̀ உருவாக்கும் அடுத்த செயற்கையான சிக்கல் வரை - இப்போதைக்கு வணக்கம் சார் என குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை ராகுல் காந்தி தமிழ்நாடு குறித்து பேச தமிழகத்தில் இளம் தலைமுறை மறந்த காங்கிரஸ் செய்த துரோகங்களை பட்டியல் போட்டுள்ளார் அண்ணாமலை, மொத்தத்தில் தமிழகம் குறித்து பேசி கடந்த 24 மணி நேரத்தில் வாங்கி கட்டி கொண்டுள்ளார் ராகுல்.

அண்ணாமலை கொடுத்த பதில் தற்போது தேசிய அளவில் குறிப்பாக தன்னை தமிழன் என சொன்ன ராகுலின் காங்கிரஸ் செய்த செயலை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார் அண்ணாமலை.

 More Watch Videos