Contact Us

திமுக வந்து இப்படி பண்றதுக்கு... பாஜகவே பரவால்ல... மனம் விட்டு கதறிய திருமுருகன் காந்தி...!

Annamalai ,Thirumurugan
Annamalai ,Thirumurugan

பாஜக ஆதரவு ஆட்சி இருந்த போது எங்களுக்கு என்ன நடந்ததோ அதை விட அதிகமாக திமுக ஆட்சியில் நடக்கிறது நாங்கள் என்ன பாவம் செய்தோம் என்பது போன்று பத்திரிகையாளர்கள் மத்தியில் குமுறிய திருமுருகன் காந்தி பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


ஒரு காலத்தில் மிக பெரிய அளவில் தமிழகத்தில் வலம் வந்த சுற்று சூழல் போராளிகளில் திருமுருகன் காந்தியும் ஒருவர், அவருக்கு ஐ நா சபை காந்தி என்ற பட்ட பெயரும் இருந்தது, ஐ நா சபை எல்லாம் சென்று மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்கிறார் பார் என சில இளைஞர்கள் மிக பெரிய அளவில் பேசி வந்தனர்.

ஆனால் அவற்றை எல்லாம் சில நாட்களில் சமூக வலைத்தளம் மூலம் பலர் உடைத்தனர், அது ஐ நா சபை அழைக்கவில்லை இவர் விண்ணப்பம் போட்டார் அதனால் அங்கு அழைத்தார்கள் அங்கு யார் வேண்டுமானாலும் பேசலாம் என்ற உண்மை தெரியவர மெல்ல மெல்ல திருமுருகன் காந்தி குறித்து இளைஞர்களுக்கு உண்மை தெரியவர தொடங்கியது.

இதன் பின்னர் நடந்தது பல,  ஆனால் திருமுருகன் காந்தி சமீபத்தில் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் பேசிய பேச்சுக்கள் மிகவும் பரிதாபத்திற்கு உரிய வகையில் அமைந்து இருந்தது எங்களை எந்த ஊடகமும் விவாதத்திற்கு அழைப்பது இல்லை முன்பு பாஜக அழுத்தம் காரணமாக இரண்டு ஊடகங்கள் எங்களை புறக்கணித்தன, சரி ஆட்சி மாறி திமுக வந்தது...,

இப்போது எந்த ஊடகமும் எங்களை கண்டு கொள்வது இல்லை, போஸ்டர் அடித்தால் கிழிக்கிறார்கள், சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவு செய்தால் முடக்கி விடுகிறார்கள் நாங்கள் என்ன தான் செய்வது எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி வேதனையுடன் பேசி இருக்கிறார் தி.மு.காந்தி

இதற்கே இப்படி திருமுருகன் காந்தி புலம்புகிறாரே நாளை பாஜக ஆட்சி அமைந்தால் உள்ளே தூக்கி வைத்தால் என்ன செய்வார் என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.