Cinema

அருகில்வைத்து "பாண்டேவுக்கு" அறிவுரை வழங்கிய நடிகர் விஜய்யின் தந்தை சிக்கினார்!

Pandey, vijay and S.A. Chandrasekar
Pandey, vijay and S.A. Chandrasekar

மீண்டும் திரைப்பட ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் ஊடகவியலாளர் பாண்டே குறித்து விமர்சனம் செய்த நடிகர் விஜய்யின் தந்தையும் திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போது நெட்டிசன்களிடம் சிக்கி சிதைந்து வருகிறார்.


ஹீரோ சினிமாஸ். சி.மணிகண்டன் வழங்க கதிரவன் கதாநாயகனாக நடிக்கும் படம் மீண்டும். இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி  சரவணன் சுப்பையா இயக்கி உள்ளார். இவர் அஜீத்குமார் நடிப்பில் பரபரப்பாக பேசப்பட்ட வெற்றிப்படமான  சிட்டிசன் படத்தை இயக்கியவர். மீண்டும் படத்தில் கதிரவன் ஜோடியாக அனகா நடித்திருக்கிறார். இவர் டிக்கிலோனா, நட்பே துணை படங்களில் நடித்தவர்.  பிரணவ் ராயன், அனுராதா, துரை சுதாகர், சுபா பாண்டியன்,  அபிதா செட்டி,  யார் கண்ணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சுப்ரமணியம் சிவா, தர்ஷினி, இந்துமதி, மணிகண்டன், கேபிள் சங்கர், ஆதர்ஷ், மோனிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்,

இரண்டு தந்தை, ஒரு பெண் ஒரு குழந்தை என்ற மாறுபட்ட கதையம்சமுள்ள இப்படத்தில் கடற்படையினரிடம் சிக்கி தமிழ் மீனவர்கள்படும் சித்ரவதையை தத்ரூபமாக்கி படமாக்கி உள்ளனர். இந்தியா மீது மறைமுக தாக்குதல் நடத்தும் இலங்கை, சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஞ்ஞான ரீதியான் தாக்குதலையும் இப்படத்தில் சொல்லியிருக்கின்றனர்.  மீண்டும் படத்தின் டிரைலர் வெளியீடு  மற்றும் பாடல்கள் முன்னோட்டம் இன்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி,  பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, திரைப்பட இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பேரரசு முன்னிலை வகித்து படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர். 

இதில் கலந்து கொண்டு பேசிய எஸ் ஏ சந்திரசேகர் மீண்டும் சரவணன் சுப்பையா வந்துள்ளார் திறமையுள்ளவர்கள் எல்லாம் ஏன் நடுவில் கொஞ்சம் சினிமாவை விட்டு ஒதுங்கிட்டீங்களா? சினிமா ஒதுக்கி விட்டதா என்று தெரியவில்லை. சரவண சுப்பையா இயக்கிய சிட்டிசன் படம் யாரும் நினைத்துப்பார்க்க முடியாத விஷயங்களை பேசியது. சினிமா பொழுது போக்காக எடுக்கிறோம் அதில் சில நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு சிலர்தான்.  சிட்டிசன் படத்தில் தனது திறமையை நிரூபித்தவர் இயக்குனர் என பாராட்டினார்.

அதன் பிறகு பாண்டே ஒரு திறமையானவர்கஅவர் வழி தவறி போவதாக தெரிகிறது, அவர் நல் பாதை திரும்பவேண்டும் எனவும் அது தமிழர்களுக்கு பயன்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டு பேசியிருந்தார் இந்த சூழலில் பாண்டே ஏன் தவறான வழியில் போவதாக சந்திர சேகர் பேசினார் என கேள்வி எழுந்தது இதற்கு தற்போது பாண்டே ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

பாண்டே சூர்யா விஜய் போன்ற நடிகர்களின் இரட்டை செயல்பாடு குறித்து பொது மக்கள் இடத்தில் பேசிவருகிறார் சமீபத்தில் கூட ஜெய்பீம் சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்தார், வேண்டாம் சூர்யா இது நீர் குமிழி என குறிப்பிட்டார், தொடர்ந்து பிரிவினைக்கு எதிராக கருத்து தெரிவித்துவரும் நபர்களுக்கு எதிராக பார்வையை முன்வைத்து வருபவர் பாண்டே, அந்த பாதை சரியானது தான்.. சந்திரசேகர் போன்றோர் எந்த பாதையில் செல்கிறார்கள் என யாருக்குமே தெரியாது முதலில் இந்தியனாக ஒன்றிணையுங்கள் என சந்திரசேகருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.