Cinema

ஏ .ஆர் .ரஹ்மான் முகத்திரை கிழிந்தது...!பெரும் சிக்கலில் ஏ. ஆர். ரஹ்மான்...!

AR Rahnan,
AR Rahnan,

மத்திய பாஜக அரசிற்கு எதிராக  அவ்வப்போது பெரிய நியாஸ்தன் போல கருத்து தெரிவித்து வந்த எ ஆர் ரஹ்மான் முகத்திரை தற்போது கிழிந்து தொங்கி இருக்கிறது அதிலும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் மன்னிப்பு கேட்ட நிலையில் தான் தற்போது மேலும் ரஹ்மானுக்கு சிக்கல் உண்டாகி இருக்கிறது.சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்றுநடைபெற்றது. திரையுலகில் தனது 30 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தினார். இதற்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


கோல்டு, பிளாட்டினம், சில்வர் என டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பியதாக குற்றம்சாட்டியுள்ளனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிந்ததால் பலருக்கும் மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.இதனையடுத்து பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபகாலங்களில் இப்படி ஒரு மோசமான நிகழ்ச்சி ஏற்பாட்டை பார்த்ததில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த குளறுபடி முழு பொறுப்பேற்று மன்னிப்புக் கோரியுள்ளது. அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை மக்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். இந்த அபாரமான வரவேற்பும், கட்டுக்கடங்காத கூட்டமும் எங்கள் நிகழ்ச்சியை பெரும் வெற்றியடையச் செய்துள்ளன. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதவர்களிடம் நாங்கள் மனதார மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். இதற்கான முழு பொறுப்பையும் நாங்களே ஏற்கிறோம். நாங்கள் உங்களோடு இருக்கிறோம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நிறுவனம் மன்னிப்பு கேட்டதே தவற இது வரை நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படாத நபர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கிறோம் என நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனமோ அல்லது ரஹ்மான் தரப்போ இது வரை வாய் திறக்கவில்லை, இந்த நிலையில் தான் நேற்று நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்று அவதிப்பட்ட திரும்பிய பலரும் தங்கள் வேதனையை கொட்டி தீர்த்து வருகின்றனர்.ஊரில் தான் தான் யோக்கியன் என்பது போல் ரஹ்மான் பேசுவார் ஆனால் பணத்தை திருப்பி கொடுக்க இது வரை வாய் திறக்காதது ஏன் என விளாசி வருகின்றனர் ஏமாந்த மக்கள். இளையராஜா ஒரு தவறு செய்தால் அதனை மறு நாளே சரி செய்து தனது தரப்பு விளக்கத்தை கொடுப்பவர் ஆனால் தனது ரசிகர்களை குடும்பத்துடன் ரோட்டில் நிறுத்திய ரஹ்மான் இதற்கு பதில் சொல்லி தீர்வதுடன் அபராதத்துடன் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்.இனியாவது இளையராஜாவிடம் இருந்து பாடம் கற்று கொள்ளுங்கள் என ரஹ்மானை விளாசி வருகின்றனர் நிகழ்ச்சிக்கு சென்று அவதிப்பட்ட மக்கள்....!