Cinema

#BREAKING இதுவரை இல்லாத அளவு சூர்யாவிற்கு கடும் பின்னடைவு, அடி நாதமே முடிந்தது !

suriya and jaibheem
suriya and jaibheem

எந்த கதையை அடி நாதமாக வைத்து திரைப்படத்தை எடுத்தாரோ சூர்யா,  அந்த கதையின் நாயகியே சூர்யா குறித்து பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார், இந்த தகவல் சினிமா உலகில் சூர்யாவிற்கு கடும் பின்னடைவை கொடுத்துள்ளதுடன் புதிய சர்ச்சையையும் கொடுத்துள்ளது.


வன்னியர் அமைப்புகள் தங்கள் சாதி குறித்து திட்டமிட்டு அவமதித்துவிட்டார் சூர்யா என போராட்டங்கள் நடத்தி வரும் சூழலில் தற்போது கதையின் நாயகன் ராஜகண்ணுவின் மனைவி பார்வதி சூர்யா குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பார்வதி கூறியதாவது, தனது கணவரையும், தன்னையும் மையமாக வைத்து இப்படி ஒரு படம் எடுக்கப்போகிறோம் என்ற தகவலை படத்தின் தயாரிப்பாளரான சூர்யா உட்பட யாரும் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும், தங்கள் குடும்பத்தில் நடந்த நிகழ்வை படமாக எடுத்து கோடி கோடியாக சம்பாதிக்கும் சூர்யா இதுவரை எட்டிக்கூட பார்க்கவில்லை என்றும் உதவ முன்வரவில்லை எனவும் வேதனை தெரிவித்திருக்கிறார். இது மட்டுமின்றி, தாங்கள் குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றும் இருளர் இனம் கிடையாது எனவும் நிஜ செங்கேனியான பார்வதி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

இரண்டு மகன்கள் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது ஒண்டிக்குடிசையில் மகள், மருமகனுடன் ஜீவணத்திற்கு கஷ்டப்படுவதாகவும் கண் கலங்கியிருக்கிறார் பார்வதி இந்த தகவல் தற்போது கடும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது, சூர்யா வன்னியர் சமூகத்தை மட்டும் இழிவு படுத்தவில்லை உண்மையான கதையின் நாயகி குடும்பத்தை வைத்து பணத்தை சம்பாரித்துள்ளார்.

தான் கோடி கோடியாக சம்பாரிப்பதற்கு, வன்னியர், பழங்குடியின சமூகமான குறவர் சமூகத்தையும் சூர்யா இழிவு படுத்திவிட்டார் என்ற புது சர்ச்சை உண்டாகி உள்ளது.