Cinema

"சிங்கம் அமைதியாக இருப்பதால் ஓநாய்கள் ஊளையிடுவதா?"...வைரலாகும் சுவரொட்டி!

Suriya, Ameer
Suriya, Ameer

பருத்திவீரன் பட விவகார சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நேற்று முன் தினம் இயக்குனர் அமீரிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் பிறகும் சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட நடிகர்கள் மீண்டும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை சீண்டினார்கள். இதனால் சிங்கம்  அமைதியாக இருப்பதால் ஓநாய்கள் ஊளையிடுவதா? என்பது போல் நாமக்கல் மாவட்டத்தில் ஒட்டிய போஸ்டர் வைரலாகி வருகிறது.


தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீர் பற்றி கூறிய விபரம் தான் தற்பொழுது தமிழ் சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 'என்னுடைய முதல் படமான பருத்திவீரனில் என்னை ஏமாற்றி விட்டார், நிறைய பொய் கணக்கு காட்டி இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பன்றி வாங்குவதில் கூட பொய் கணக்கு காட்டி இயக்குனர் அமீர் ஏமாற்றிவிட்டார் அதனால் தான் தற்பொழுது வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்' என ஞானவேல் ராஜா கூறினார். இதற்கு அமீர் தரப்பிலிருந்து பல்வேறு எதிர்ப்பு அலைகள் வெளிவந்தன, குறிப்பாக இயக்குனர் சமுத்திரகனி, நடிகர் சசிகுமார், கரு.பழனியப்பன் போன்றோர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

இந்த விவகாரத்தில் நடிகர் சூர்யாவும், கார்த்தியும் எந்த ஒரு குரலும் கொடுக்காமல் இருந்தனர், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சூர்யா குடும்பத்திற்கு நெருங்கிய சொந்தக்காரர் என கூறப்பட்டு வந்த வேலையில் அவர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை இதனால் இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. இதனை கட்டுப்படுத்த ஞானவேல் ராஜா அறிக்கை வெளியிட்டு வந்தார். அதன் மூலம் அந்த பிரச்சனை முடிவடையும் என எண்ணிய நிலையில், மீண்டும் வெடித்தது. அதாவது, எறியும் தீயில் என்னை ஊற்றுவது போல் மாறியது. 

இதற்கிடையில் அறிக்கைக்கு நடிகர் சமுத்திரக்கனி, அமீர் போன்றவர்கள் 'இந்த சீன் எல்லாம் தேவை இல்லை பிரதர்' பேசிய வீடியோ முழுமையாக நீக்க வேண்டும் என்றும் அதேபோல சிவக்குமார் குடும்பத்தினரின் மவுனம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டும் வருகின்றன. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் நாமக்கல் மாவட்ட பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். அதில். "நன்றி கெட்ட துரோகி இயக்குனர் அமீரையும் அமீரின் அல்லக்கைகளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். கருங்காலி பழனியப்பனுக்கு நாவடக்கம் தேவை; சிங்கம் அமைதியாக இருப்பதால் ஓநாய்கள் ஊளையிடுவதா? - சூர்யா நற்பணி இயக்கம், நாமக்கல் கிழக்கு மாவட்டம்". சார்பாக ஒட்டியுள்ளனர் இந்த படம் தற்போது இணையத்தில் உள்ள வருகிறது. ஆனால் இது உண்மயா, பொய்யா அல்லது சூர்யா ரசிகர்கள் தான் ஓட்டினார்கள் என்பது உண்மையாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.