Cinema

அண்ணனுக்காக தம்பியான கங்கை அமரன் களத்தில் இறங்கி வைரமுத்துவிற்கு கொடுத்த எச்சரிக்கை.

VAIRAMUTHU , GANGAIAMARAN
VAIRAMUTHU , GANGAIAMARAN

தமிழ் திரையுலகில் இசைக்கு ஒரு ஞானியாகவும் இசை குறித்த பாராட்டின் புகழின் உச்சிக்கே சென்ற மண்ணின் மைந்தனாக கருதப்படுபவர் இசைஞானி இளையராஜா, எப்படி இசையில் இளையராஜா புகழின் உச்சியில் இருக்கிறாரோ அதேபோன்று கவிதை எழுதுவதிலும் பாடல் ஏற்றுவதிலும் வைரமுத்து மற்றொரு பக்கம் உச்சத்தில் இருக்கிறார். சில ரசிகர்கள் இசைக்காகவே இளையராஜாவை நாடிச் செல்வார்கள் சிலர் வைரமுத்துவின் எழுத்திற்காகவே அவரை நாடிச் செல்வார்கள் இந்த இரண்டும் ஒன்று சேரும் பாடலை கேட்கவும் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அப்படி பல பாடல்களில் இவர்களது கைவண்ணங்கள் இருந்து வந்த நிலையில் இடையில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் தற்போது வரை இருவருக்கும் இடையே பிரிவும் சண்டையும் முற்றிக் கொண்டே வருகிறது. எதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது என்பது குறித்து பல காரணங்கள் கூறப்படுகிறது அதில் ஒன்றாக இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலில் இளையராஜா சில வரிகளை மாற்றும்படி வைரமுத்துவிடும் கூறியதாகவும் அதற்கு வைரமுத்து முடியாது என்று மறுத்ததாகவும் இதனால் ஏற்பட்ட சண்டையே இருவரது பிரிவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.


அதே சமயத்தில், வார பத்திரிகை ஊடகம் ஒன்று இளையராஜாவை ஒரு தொடர் எழுதும்படி கேட்டுக் கொண்டுள்ளது ஆனால் இளையராஜாவிற்கு தொடர் எழுதுவதற்கு நேரம் இல்லாததால் தனது நண்பர் வைரமுத்து விடம் கூறி எழுத சொல்லி இருக்கிறார் மேலும் இதைப்பற்றி வெளியில் தெரிவிக்க கூடாது என்றும் வைரமுத்து விடும் கேட்டுள்ளார். தொடரும் வெளியாக நல்ல பாராட்டுகளை பெற ஆரம்பித்தது அப்பொழுது ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த வைரமுத்து அந்த தொடரை எழுதியது தான்தான் என்றும் கூறியுள்ளார். இதனால் கடுப்பாகி இளையராஜா மற்றும் வைரமுத்துவிற்கு இடையேயான நட்பு விரிசலை கண்டது அதற்குப் பிறகு இருவரும் சேர்ந்து பணியாற்றவே இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இவர்களுடைய இந்த பிரிவு தற்போது முற்றி வாய் தகராறையும் தாண்டி வழக்கு வரை சென்று விட்டது. அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளையராஜா கண்ணதாசன் தான் சிறந்த கலைஞர் என்று கூறினார்.

இதனால் அதே மேடையில் எம் எஸ் விஸ்வநாதன் தான் சிறந்த இசையமைப்பாளர் என இளையராஜா முன்னிலையில் வைரமுத்து அவருக்கு பதிலடி கொடுத்தார். அதுமட்டுமின்றி மறைமுகமாக இளையராஜாவை அவ்வப்போது சாடி வந்த வைரமுத்துவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில்  இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர்ந்தார். மேலும் படிக்காத பக்கங்கள் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து ஒரு பாடல் ஆனது இசையும் கவிதையும் சேர்ந்தால்தான் பாடலாகும் அது இல்லை என்று சொல்பவர் அஞ்ஞானி என நேரடியாக இசைஞானியை குறிப்பிடுவது போன்று இளையராஜாவை சாடினார். அதுமட்டுமின்றி திரைப்பாடல்கள் என்பது இசை மட்டுமல்ல அதில் வரிகளும் இருந்தால்தான் பாடலாகும் என்றும் இளையராஜாவை மறைமுகமாக விமர்சனம் செய்தார். அதோடு ஒருவரை அவரது பெயரை வைத்துதானே அழைக்கிறோம் பெயர் இல்லை என்றால் எப்படி அவரை நம்மால் அழைக்க முடியும்! என தொடர்ச்சியாக இளையராஜாவை குறித்து விமர்சன கருத்துக்களை முன்வைத்து வந்தார்.

இதனால் தமிழ் திரை உலகமே ஸ்தம்பித்து நின்றது. இந்த நிலையில் வைரமுத்துவிற்கு பதிலடி கொடுப்பதற்காக கங்கை அமரன் களத்தில் இறங்கியுள்ளது திரை வட்டாரத்தை இன்னும் பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது. அதாவது தனியார் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி கொடுத்த கங்கை அமரன், வைரமுத்து நல்ல கவிஞர் என்பதை ஒத்துக்கொள்ளலாம் ஆனால் அவர் நல்ல மனிதர் கிடையாது, அவருக்கு நல்ல புத்தியும் கிடையாது, இளையராஜாவை குறித்து குத்தம் சொல்ல வேண்டும் என்பதற்காகவே பேட்டிகளில் அவர் பேசி வருகிறார். இதனால் ஒரு தம்பியாக என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று இளையராஜாவை தொடர்ந்து சீண்டி வரும் வைரமுத்துவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் எச்சரிக்கை விடும் வகையிலும் அவர் பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகி  வருகிறது.