Cinema

நடிகர் "கார்த்திக்கு"..பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராம் கடைசி கேள்விதான் ஹைலைட்..!

actor karthi and Gayatri Raghuram's
actor karthi and Gayatri Raghuram's

பாண்டவர் அணி எனப்படும் நடிகர் விஷால் அணி நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றது இதில் தலைவராக நாசர், செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணை தலைவர்களாக கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.


இந்த சூழலில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் கார்த்தி.,‘தணிக்கை குழு சான்று பெற்ற திரைப்படங்களுக்கு அரசியல் கட்சிகள் மூலம் வரும் தொடர் மிரட்டல்களுக்கு நடிகர் சங்கம் சார்பில் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க உதவுவோம். நடிகர் சங்கம் கண்டிப்பாக துணை நிற்கும் என்று கூறினார் .

கார்த்தியின் இந்த கருத்தை பகிர்ந்துள்ள காயத்ரி ரகுராம் ‘குறிப்பிட்ட மக்கள் மீதும் கோயில்கள் மீதும் கலாச்சாரத்தின் மீதும் நீங்கள் வெறுப்பைக் காட்டினால் என்ன செய்வது? அவர்கள் சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கலாம் மற்றும் படங்களை புறக்கணிக்கலாம் அது அவர்களின் உரிமை என பதிலடி கொடுத்தார்.

மேலும் பதிவிட்ட காயத்ரி ரகுராம் ஏற்கனவே நடிகர் சங்க கட்டிடம் நடிகர் சங்க தேர்தல் உடன் இணைக்கப்படவில்லை.போலி வாக்குக்கு பணம் செலவழிக்காமல் கட்டிடம் கட்டி இருக்கலாம்.

மேலும், கல்யாண மண்டபத்திற்கு தனது தந்தை நடிகர் சிவகுமாரின் பெயரை வைக்க வேண்டும் என்பது தான் கார்த்திக்கின் எண்ணம். நடிகர் சங்கத்தை அகரம் அறக்கட்டளை ஆக மாற்ற திட்டமிட்டுள்ளனர் என்று காயத்ரி ரகுராம், கார்த்தியை தாக்கி பயங்கரமாக விமர்சித்து பதிவுகளை பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படத்திற்கு பல அரசியல் கட்சிகளிடம் இருந்து எதிர்புகள் கிளம்பியது வன்னியர் அமைப்புகள் சூர்யாவின் திரைப்படத்தை புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது கார்த்தியின் பேச்சு எதிர்காலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.