Cinema

நடிகை என்றால் இஷ்டத்திற்கு எழுதுவார்களோ வருத்தத்துடன் பேட்டி அளித்த அஞ்சலி

actor anjali
actor anjali

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு இந்திய திரைப்பட நடிகை அஞ்சலி. இவர் தனது  பள்ளிப்படிப்பை ஆந்திராவில் முடித்தார் அதற்கு பிறகு சென்னைக்கு சென்று தனது கல்லூரி படிப்பை தொடங்கிய அஞ்சலி கணிதத்தில் பட்டம் பெற்று பல குறும்படங்களில் நடிக்க தொடங்கினார். அதைத் தொடர்ந்து பல விளம்பரங்களிலும் நடிக்க தொடங்கினார். அப்பொழுது தெலுங்கில் இவர் நடிகையாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது தெலுங்கில் இரண்டு திரைப்படங்களின் நடித்த பிறகு தமிழில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் நடிக்க அஞ்சலிக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் ஜீவாவுடன் நடித்திருந்த அஞ்சலி ஆனந்தி என்ற வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்த தென் மண்டல ஃபிலிம் பேர் விருதுகளில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார். அதற்குப் பிறகு இவரது அடுத்த படமாக 2010ல் அங்காடி தெரு திரைப்படம் விளங்கியது இதிலும் கனியாக நடித்து அந்த ஆண்டிலும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். இப்படி நடிக்க ஆரம்பித்த சில வருடங்களிலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து தமிழ் திரை உலகில் சிறந்த இளம் நடிகையாக அறியப்பட்டார்.


இதனை அடுத்து தமிழில் வெளியான எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தனது மாறுபட்ட நடிப்பையும் வெளிகாட்டி தன் ரசிகர் பட்டாளத்தை வலுவேற்றினார். இப்படி தமிழில் தொடர்ச்சியாக படங்கள் நடிக்க ஆரம்பித்த அஞ்சலி தெலுங்கிலும் கவனம் செலுத்தி சீதாமா வக்கிட்லோ, சிரிமல்லே சேட்டு, பாலுபு, மசாலா, கீதாஞ்சலி என்ன தொடர்ச்சியாக வெற்றி படங்களின் நடித்து தெலுங்கிலும் ஒரு வளர்ந்து வரும் மற்றும் முன்னணி நடிகையாக திகழ ஆரம்பித்தார் கேரக்டருக்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றிக் கொள்ளும் சுபாவத்தை கொண்டவர் 2016ல் இறைவி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் பலரது பாராட்டுகளையும் பெற்றார். இதனை தொடர்ந்து அதிகம் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்து தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் அஞ்சலி!  திரைப்படத்தின் மூலம் எந்த அளவிற்கு பிரபலமானோரோ அதே அளவிற்கு இவரை சூழ்ந்திருந்த சர்ச்சைகளாலும் பிரபலமானார்.

முதலில் இவரது சித்தியுடன் பிரச்சனை பிறகு இயக்குனர் களஞ்சியத்துடன் பிரச்சனை என தொடர்ச்சியாக பிரச்சனைகள் வந்து கொண்டிருந்த சமயத்தில் தெலுங்கிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்ததால் ஹைதராபாத்தில் குடியேறி அங்கேயே நடிக்க ஆரம்பித்தார். அதற்குப் பிறகு எஸ் ஜே சூர்யா வின் பிறந்தநாள் பார்ட்டியில் ஏற்பட்ட பிரச்சனை சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படி தொடர்ச்சியாக அஞ்சலி குறித்த சர்ச்சைகள் வெளிவந்து கொண்டே இருந்த சமயத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அஞ்சலி நிறைய செய்திகள் என்னை பற்றி வந்து கொண்டே இருக்கிறது ஆனால் அந்த செய்திகள் அனைத்தும் உண்மை அல்ல அந்த செய்திகளை படிக்கும் பொழுது எனக்கு சிரிப்புதான் வருகிறது என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்த நடிகை அஞ்சலி தனது திருமணம் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அதாவது சினிமாவில் எனக்கு அதிகமான நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்களே என்னைப் பற்றி யாருடன் இணைத்து எழுத வேண்டும் என்பதை முடிவு செய்து எழுகிறார்கள்! முதலில் நடிகர் ஜெய்யை காதலிப்பதாக செய்திகள் வந்தது அதற்கு பிறகு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து அமெரிக்காவில் ரகசியமாக குடும்பம் நடத்தி வருவதாகவும் சொன்னார்கள், எப்பொழுது எனக்கே தெரியாமல் எனக்கு திருமணம் ஆனது என்று நினைத்து சிரித்துக் கொண்டேன் ஒரு நடிகை என்பதாலே இப்படி இஷ்டம் போல் எழுதுகிறார்கள் என்று வருத்தத்துடன் அஞ்சலி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.