Cinema

"இளையராஜாவை" கொச்சை படுத்திய ஜோதிமணி.. இளையராஜா தரப்பு பதிலடி..!

ilayaraja and jothimani
ilayaraja and jothimani

காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி இசைஞானி இளையராஜா குறித்து கொச்சை படுத்தும் விதமாக பேசி கடுமையான கண்டனத்தை பெற்று வருகிறார், பாஜக ஆர் எஸ் எஸ் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் மனிதர்களை தங்களுக்கு ஆதரவாக பேச வைப்பது அதற்காக  ஒரு விலையும் கொடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.


அதாவது இளையராஜா பணத்திற்காக விலை போயிருக்கலாம் என கொச்சையாக பேசியுள்ளார் ஜோதிமணி இது குறித்து அவர் தெரிவித்ததை பின்வருமாறு : இளையராஜாவின் இசை தமிழ் மண்ணின் ஆத்மார்த்தமான அடையாளங்களில் ஒன்று. அதற்காக அவரை நாம் என்றென்றும் நேசிப்போம். ஆனால் அம்பேத்கருக்கு இணையாக மோடியை உயர்த்தி அவர் பேசுவதை வெறும் அரசியல் புரிதலற்ற நிலைப்பாடு என்று கடந்து போய்விட முடியாது.

ஆர்.எஸ்.எஸ்-பாஜக பாசிச, பிரிவினைவாத, வன்முறை சித்தாந்தம் ஊடுருவும் பல வழிகளில் இதுவும் ஒன்று. சமூகத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை தனக்கு ஆதரவாகப் பேசவைப்பது. அதற்கென்று ஒரு விலையையும் அது வைத்திருக்கும். முன்பு ரஜினிகாந்த், இன்று இளையராஜா.

ஆனால் தமிழ் மண் எச்சரிக்கையும், விழிப்புணர்வும் மிகுந்தது. அன்பை, அமைதியை, ஒற்றுமையை, வளர்ச்சியை விரும்புவது. இதற்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்-பாஜக பாசிச சித்தாந்தை யார் கையில் எடுத்தாலும் அவர்களை, இரக்கமற்று தோலுரித்து தொங்கவிடும் வழக்கமுடையது. இளையராஜாவுக்கும் அதுதான் நேர்ந்துள்ளது.

ஒரு கருத்தைக் கூறுவது ஒருவரின் உரிமை. அந்தக் கருத்து சமூகத்திற்கு எதிராக இருக்குமென்றால் அதற்கான கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். கருத்துரிமையும், விமர்சிக்கும் உரிமையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

இன்று இளையராஜாவிற்காக கருத்துரிமைக் காவலர் வேடம் பூண்டுள்ள பாஜக, ஏன் மக்கள் விரோத மோடி அரசிற்கு எதிரான விமர்சனங்களை முன்வைப்பவர்களின் கருத்துரிமைக்கு எதிராக அடக்கு முறையை கட்டவிழ்த்து விடுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

ஜோதிமணியின் இந்த விமார்சனத்திற்கு பாஜக மற்றும் இளையராஜா ரசிகர்கள் கடுமையான முறையில் பதிலடி கொடுத்து வருகின்றனர், மக்கள் மத்தியில் சென்று வாக்கு கேட்டு வெற்றி பெற காங்கிரஸ் கட்சிக்கு துப்பு இல்லை, இருந்த பஞ்சாப் மாநிலத்தை ஆம் ஆத்மீ கட்சியிடம் இழந்த கட்சி காங்கிரஸ், திமுக கூட்டணியில் இல்லை என்றால் ஜோதிமணி வார்டு கவுன்சிலர் கூட ஆயிருக்க முடியாது, இவரெல்லாம் இசை துறையில் சாதனை படைத்த இளையராஜாவிற்கு அறிவுரை வழங்குகிறார்.

போமா போயி கரூர் தொகுதியில் முதலில் செந்தில் பாலாஜி மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் இருவரிடம் உள்ள பஞ்சாயத்தை முதலில் முடியுங்கள் அப்புறம் இசைஞானி குறித்து பேசலாம் என ஜோதிமணி மூக்கை சமூக வலைத்தளத்தில் உடைத்து வருகின்றனர் பாஜக மற்றும் இளையராஜா ஆதரவாளர்கள்.