Cinema

நெப்போலியன்- விஜய் சண்டை! முதல்ல..உங்க அப்பா அம்மா கிட்ட பேசு..! அப்புறம் நானும் தயார்!

Vijay , nepoleon
Vijay , nepoleon

நடிகர் விஜய் குறித்து அமெரிக்கா வரை என்ன பேசி கொள்கிறார்கள் என நெப்போலியன் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் படு வைரலாக பரவி வரும் சூழலில் தற்போது நெப்போலியன் பேச்சை கேட்டு விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் அதே நேரத்தில் மற்றவர்கள் நெப்போலியன் பேசியதில் ஒன்றும் தவறு இல்லை என்றும் கூறுகின்றனர்.


வாரிசு' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு நடிகர் விஜய் தற்போது 'தளபதி 67' படத்துக்காக தயாராகிவருகிறார். இந்தப் படத்தின் அப்டேட் வருகிற பிப்ரவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் வெளியாகும் என்று லோகேஷ் சமீபத்தில் ஒரு விழாவில் பேசியிருந்தார். விக்ரம் படம் துவங்குவதற்கு முன் டீசர் வெளியிடப்பட்டது போல, 'தளபதி 67' படத்துக்கும் டீசர் வெளியாகலாம் என்றும் அதற்கான படப்பிடிப்பு தான் சமீபத்தில் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 67 படத்தில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் விக்ரமும் இந்தப் படத்தில் இணையவிருப்பதாகவும் கூறப்படுகிறது. செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, நண்பன், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்தின் மூலம் 3வது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார்.

இந்த நிலையில் விஜய் குறித்து நடிகர் நெப்போலியன் பேசிய வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. அதில், ''போக்கிரி படத்துல ஒரு சம்பவம் நடந்துச்சு. நானும் விஜய்யும் பேசிக்கிறது இல்ல. அவர் படங்கள் எதையும் பார்க்கிறது இல்ல. விஜய் ரெடினா நானும் பேசுறதுக்கு ரெடி, இதை நீங்க விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். ஏன்னா விஜய் அவரோட அப்பா அம்மா கிட்டயே பேசமாட்றாரே.

விஜய் தன்னோட அப்பா அம்மா கிட்டயே பேசிக்கிறது இல்லனு எல்லோரும் சொல்றாங்க. அமெரிக்கா வரை செய்தி வந்திருக்கு. அது உண்மையா? பொய்யா? என்று கூட எனக்கு தெரியாது. முதல்ல அவரோட அப்பா அம்மா கூட சமரசம் ஆகட்டும். எனக்கும் விஜய்க்கும் மோதல் ஏற்பட்டு 15 வருஷங்களாச்சு. இவ்வளவு நாள் இடைவேளைக்கு பிறகு விஜய் என்னிடம் பேச தயாராக இருப்பாரா என்று எனக்கு தெரியவில்லை. நான் பேசுவதற்கு தயார் அவர் தயாரா என்று கேளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

என்னதான் வாரிசு திரைப்படத்தில் அப்பா அம்மா பாசம் குறித்து விஜய் நடித்து இருந்தாலும், உண்மையான வாழ்வில் பெற்றோரை விஜய் சந்திக்காமல் ஒதுக்கி வைத்து இருப்பது நியாயமா எனவும் பலர் கேள்வி எழுப்பு கின்றனர்.

சினிமா நடிகர்களுக்கு இதெல்லாம் ஒரு பொழுது போக்கு சம்பவம் தான் பெற்றோர் மீது பாசம் இருப்பது போன்று திரைப்படத்தில் நடிக்கிறார்கள், அம்மா அப்பாவை வணங்கி பாரு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்றெல்லாம் பாடல் போடுவார்கள் ஆனால் நிஜ வாழ்வில் அதே பெற்றோரை தனி வீட்டில் விட்டு விடுவார்கள் இதுதான் உண்மையான நடிகர்கள் பலரின் முகம் என அடித்து கூறுகின்றனர் கோடம்பாக்க வட்டாரங்கள்.