Cinema

டிடி குறித்து பிரியதர்ஷினி போட்டு உடைத்த உண்மை.....

dd, priyadharshini
dd, priyadharshini

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தனியார் தொலைக்காட்சியாக இயங்கி வரும் விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளனாக இருந்தவர் திவ்யதர்ஷினி. இவரை திவ்யதர்ஷினி என்று கூறினால் பெரும்பாலானோருக்கு தெரியாது ஆனால் டிடி என்று கூறினால் தமிழகத்தில் இவரை தெரியாதவர்கள் யாருமே கிடையாது. மேலும் இவருடைய காபி வித் டிடி மற்றும் அன்புடன் டிடி போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. இருப்பினும் தொலைக்காட்சிகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே நடிகையாக அறிமுகமானவர் டிடி, கமலஹாசனின் தயாரிப்பில் நள தமயந்தி போன்ற படங்களில் துணை வேடங்களில் நடித்தவர் மேலும் சின்ன திரையிலும் இவர் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக செல்வி மற்றும் அரசியில் டிடியின் நடிப்பு மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றது.


அதற்குப் பிறகு 2007 விஜய் டிவியின் நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கிய டிடி 2014 இல் தனக்கு சொந்தமான நிகழ்ச்சியை பெற்று மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் தனது நீண்ட நாள் நண்பரும் உதவி இயக்குனருமான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார் இருப்பினும் 2017இல்  இருவரும் பிரிந்ததாக அறிவிப்புகள் வெளியானது மேலும் விவாகரத்தும் பெற்றனர். இதற்கு அடுத்ததாகவே விஜய் டிவியில் அடிக்கடி நிகழ்ச்சிகள் பங்கேற்பதை தவிர்த்து வந்த டிடி தனியார் யு டுப் சேனல் மற்றும் பிரபல தனியார் சேனல்களுக்கு தொகுப்பானியாகவும் சில குறிப்பிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு முடக்குவாதம் ஏற்பட்டு நீண்ட தூரம் அவரால் நடக்க முடியாத படி ஆயிற்று. மேலும் பெரும்பாலான பொது இடங்களில் வீழ்ச்சேருடன் வரும் டிடி'ஐ அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்கள் பார்க்கும் பொழுது எவ்வளவு நேரம் ஆனாலும் மேடையிலே நின்று அனைவரையும் மகிழ்வித்து சிரிக்க வைத்து கொண்டாட வைத்த டிடிக்கா...இந்த நிலைமை என்று மனம் கலங்கினர். இதனை அடுத்து டிடிக்கு இரண்டாம் திருமணம் நடைபெறப்போவதாகவும் தொழிலதிபர் ஒருவருடன் நெருங்கி பழகுவதாகவும் கிசு கிசுக்கப்பட்டது.

இந்த நிலையில் டிடியின் அக்காவான பிரியதர்ஷினி டிடிக்கு நடந்த மிக துயரத்தை போன்று வேறு யாருக்கேனும் நடந்திருந்தால் யாராலும் அவளைப் போல் மீண்டு வந்திருக்க முடியாது என்றும் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது தற்போது சன் டிவியில் மிகவும் பிரபலமாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ரேணுகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியதர்ஷினி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். தற்பொழுது தனது தங்கை டிடி குறித்து கூறியுள்ளார். ஏற்கனவே டிடிக்கு விவாகரத்து பிரச்சனைகள் தலைக்கு மேல் இருந்தது அதனால் அவர் பெருமளவில் மனமுடைந்து போயிருந்தார் இருப்பினும் அதனை வெளியில் காட்டாமல் தைரியமாக வெளிவர முயற்சித்த டிடியை சமூக வலைதளத்தில் பலர் விமர்சிக்கவும் அவதூறாக பேசவும் ஆரம்பித்தனர். இருப்பினும் அவற்றையெல்லாம் கண்டு கொண்டால் நம்மால் வாழ முடியாது என்பதை உணர்ந்து அவற்றை உதறி தள்ளி விட்டு தற்போது தன் உடல்நிலையுடன் போராடி வருகிறாள்.

தவறாக கமெண்ட்டு இடுபவர்களை நாம் என்ன சொல்ல முடியும் அது அவர்களது மனப்பான்மை அவற்றை நாம் மாத்த முடியாது அதனால் அதனை அப்படியே விட்டுவிட்டு நம் வழியில் செல்வது நமக்கு நல்லது. டிடிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதில் எங்களுக்கு அவசரம் இல்லை அவளுக்கு எப்பொழுது தோன்றுகிறதோ அவள் அப்போது செய்து கொள்வாள், ஆனால் பலரும் அவளைக் குறித்து மிகவும் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர் என் மகனுடன் அவள் வெளியில் செல்வதை கூட புகைப்படம் எடுத்து தவறாக பதிவிடுகிறார்கள்! இதை பார்க்கும் பொழுது கோபம் தான் வருகிறது. இருப்பினும் அவற்றை அனைத்தையும் சமாளித்துக் கொண்டு தனது துன்பத்தையும் மறைத்துக் கொண்டு அதில் இருந்து மீண்டு எழுந்து வந்து கொண்டிருக்கிறாள். இதன் மூலம் மற்ற அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாகவும் டிடி விளங்குவதில் எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது என்று பிரியதர்ஷினி கூறியுள்ளார்.