Cinema

திரையிலேயே திரை துறைக்கு தரமான "சம்பவம் '.. இந்த கூட்டணி எப்படி இருக்கு!

mogan g and pandey
mogan g and pandey

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அந்த வழக்கில் தனது உயிரை பணயம் வைத்து போராடிய கோவிந்தன் என்பவர் வெளியிட்ட தகவலும் மேலும் குற்றவாளியான காவல் அதிகாரி அந்தோனிசாமி என்பவர் பெயரை குரு என மாற்றி திரைப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றது கடும் அதிர்வலைகளையும் எதிர்ப்பையும் உண்டாக்கியுள்ளது.


ஜெய் பீம் திரைப்படத்தை தயாரித்த சூர்யாவிற்கு எதிராக பல தரப்பிலும் விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளது இந்த சூழலில்  மூத்த பத்திரிகையாளர் பாண்டே தனது ட்விட்டர் பக்கத்தில் உண்மைச் சம்பவம் என்பது, உள்ளதை உள்ளபடி சொல்வது. பெயர்களையும் அடையாளங்களையும் மட்டும் மாற்றினால், அதன் நோக்கம் சந்தேகிக்கப்படுவது இயல்பே. சத்யமேவஜெயதே வாய்மையேவெல்லும் என குறிப்பிட்டு இருக்கிறார் .

மேலும் திரௌபதி இயக்குனர் மோகன் ஜி பாதிக்கப்பட்ட ராஜாக்கன்னு என்ற குரவர் சமூகத்தை சார்ந்த மனிதருக்காக களத்தில் போராடி திருமணம் கூட செய்யாமல்  உடன் நின்றவர் வன்னியர் இனத்தை சேர்ந்தவர்.. மேலும் உடன் நின்ற தலைவர் பாலகிருஷ்ணன் ஐயா வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் .

ஆனால் திரைப்படத்தில் கொலை செய்த அந்தோனிசாமி என்ற பெயரை குருமூர்த்தியாக மாற்றி வன்னியர் சமூக அடையாளம் கொண்டு காட்டியதில் உள்ளது உள்நோக்க அரசியல்.. ஜெய்பீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்னவர்கள் அதை பின்பற்றவும் வேண்டும் என காட்டமாக பதில் அளித்தார் மாகாண இந்த சூழலில் ஜெய் பீம் படத்தில் தவறாக சொல்லப்பட்ட அடையாளம் பெயரை மாற்றி குரு என அடையாள படுத்தியது போன்ற சம்பவங்களை முன்வைத்து .,

பாண்டே மற்றும்  மோகன் ஆகியோர் திரைத்துறையில் இணைய  இருப்பதாக கூறபடுகிறது , மேலும் திரைத்துறையில் ஒரு சிலர் எப்படி அடையாளங்களை மாற்றி பணமும் சம்பாரிக்கிறார்கள்  என்பதை மையமாக கொண்டு கதைக்களம் உருவாகலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் வலம் வருகின்றனர் .


திரைத்துறையில் மோகன் மற்றும் பாண்டே ஆகியோர் இணைந்தால்  நிச்சயம் தரமான சம்பவமாக அந்த திரைப்படம் இருக்கும் எனவும் உண்மை சம்பவம் என்ற பெயரில் தங்கள் வசதிக்கு ஏற்ப திரைக்கதையை மாற்றி சமுதாயத்தில் குழப்பத்தை உண்டாக்க நினைக்கும் நபர்களுக்கு தரமான பதிலடியாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது ,ஜெய்பீம் சம்பவத்துக்கு சிறப்பான தரமான பதிலடி மோகனோட அடுத்த படத்துல இருக்கும் அப்ப அந்த டைம் ல குத்துதே குடையுதேனு அய்யயோ புண்படுத்திட்டாங்க னு யாரும் கதறாதீங்கப்பா இப்பவே சொல்லிடுறேன்

நீங்கள் விதைத்த வினையெல்லாம் உங்களை வேரறுக்க காத்திருக்கும்.. என மோகன் நண்பரும்  தயாரிப்பாளருமான jsk  கோபி குறிப்பிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது .