Cinema

"நாய் வாலை நிமிர்த்த முடியாது" பீஸ்ட் திரைப்படம் விஜயை கடுமையாக சாடிய ராஜேஸ்வரி பிரியா!

Rajeshwari priya and actor vijay
Rajeshwari priya and actor vijay

விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது, விஜய் ரசிகர்கள் வழக்கம் போல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் விஜய் படத்தில் வரும் வசனத்தை குறிப்பிட்டு கடுமையாக சாடி இருக்கிறார் ராஜேஸ்வரி பிரியா.


அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனர் ராஜேஸ்வரி பிரியா தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு : பீஸ்ட் பட ட்ரையிலரை இன்றுதான் பார்த்தேன். கதாநாயகி கையை பிடித்து கொள் என்கிறார் உடனே கதாநாயகன் விஜய் இடுப்பை பிடிக்கவா? என்று கேட்கும் வசனம் அருவெறுப்பினை உண்டாக்குகிறது.

விஜய் அவர்களே உங்கள் ரசிகர்களில் குழந்தைகள் அதிகம் என்பது உங்களுக்கு தெரியும். L.k.g மாணவனிடம் ஆசிரியை என் கையை பிடித்து எழுத கற்றுக் கொள் என்பார் ,உங்கள் ரசிகர் (3+ வயது) என்னவென்றே தெரியாமல் இடுப்பை பிடித்து கொள்ளவா என்பார். சமூகச் சீரழிவே உங்கள் ஹூரோயிசம். சமூக பொறுப்பு கொஞ்சமாவது வேண்டாமா?

வசனங்களில் ஆபாசம் தேவை இல்லை. பெண்கள் நாங்கள் ஏற்கனவே பல பாலியல் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறோம்.

நெல்சன் அவர்களே பெண் போகப் பொருள்தானா உங்கள் பார்வையில்?காட்சிக்கும் வசனத்திற்கும் ஆயிரம் வித்தியாசம் உள்ளது.விஜய் அவர்கள் படத்தில் பேசும் ஒவ்வொரு வசனமும் பாடப் புத்தகத்தில் உள்ள வரிகளை விட வேகமாக மாணவர்கள் மனதில் பதிகிறது.

உங்களை திருத்துவதும் நாய் வாலை நிமிர்த்துவதும் ஒன்றே என கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார், ராஜேஸ்வரி பிரியா, மொத்தத்தில் விஜய்யின் திரைப்படங்கள் வழக்கம் போல் சர்ச்சையில் சிக்குவது போன்று பீஸ்ட் திரைப்படமும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.