Cinema

ரஜினி பற்றி வெளிவரும் உண்மைகள்!!! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

RAJINIKANTH
RAJINIKANTH

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, கூலி வேலை பார்த்து  அதன் பிறகு பஸ் கண்டக்டர் ஆக வேலைகள் பார்த்து அதன் பிறகு 1975 இல் சினிமா துறையில் அறிமுகமாகி, இன்று வரையிலும் முன்னணி நடிகராக இருந்து தற்போது அனைவராலும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் பெருமைக்குரியவர் ரஜினிகாந்த். இன்றைய காலகட்டங்களில் இளைஞர்களுக்கு ஒரு ரோல் மாடலாகவும், உன் உதாரணமாகவும் உள்ளவர் இவர். கஷ்டப்பட்டு உழைத்தால் நினைத்ததை சாதிக்க முடியும் என்று உணர்த்தியவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!!! 1975 ல் நடிக்க தொடங்கி இன்று வரையிலும் இவர் திரை உலகில் நடித்துக் கொண்டுதான் உள்ளார். தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, கன்னடம், மற்றும் ஆங்கில திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். கடைசியாக 2023 ல் வெளியான ஜெயிலர் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது!! இதுவரை நடிப்பு மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.


மேலும் அதிக கடவுள் பக்தி உள்ளவராக இருந்து வருகிறார். வருடத்தில் ஒரு முறையாவது இமயமலைக்கு சென்று வழிபாடு நடத்தி விட்டு வருவார். மேலும் அவரின்  பங்களிப்பிற்காக இந்திய அரசு 2000 ஆம் ஆண்டு பத்ம பூஷன் மற்றும் 2016 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. தொடர்ந்து இவரின் நடிப்பினால் பல திரைப்படங்களில் வெற்றி பெற்று அதிக அளவில் ரசிகர்கள் ரசிகர்களை பெற்று இன்றும் நீங்காத இடத்தை பெற்று கொண்டு வருகிறார். இந்த அளவு ரசிகர்களை பெற்றதால் அவர் அரசியலுக்கு வருவார் என்று அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டது. அவரும் அரசியலுக்கு வருவார் என்று பலவிதப்பட்ட  கருத்துக்கள் எழுந்த நிலையில் சமீபத்தில் அவர் எப்போதும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கூறி இருந்தார். என்னதான் அரசியலுக்கு வராவிட்டாலும் தன்னால் முடிந்த பல உதவிகளை வெளியே தெரியாத மாதிரி மறைமுகமாக செய்து கொண்டே தான் உள்ளார்!!!  இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் ரஜினிகாந்த். 

70 வயதிலும் கொஞ்சமும் சோர்வடையாமல் இளம் ஹீரோக்கள் பலருக்கும் டஃப் கொடுத்து வருகிறார் ரஜினி. பெரிய நடிகராக ஆனபோதும் தனக்காக இருக்கும் ரசிகர்களை மதிப்புடன் நடத்துவதற்கு என்றும் தவறியதில்லை!! இந்த நிலையில், ரஜினி செய்த மற்றுமொரு உதவி வெளிச்சத்திற்கு வெளிவந்துள்ளது. அதாவது,  பாண்டியன் என்ற படத்தில் நடித்ததை பற்றி அந்தப் பட குழுவின் ஒருவரான ராமன் என்பவரிடம் பத்திரிக்கையாளர், பாண்டியன் படத்தை உங்களுக்காக ரஜினிகாந்த் செய்து கொடுத்தார் ஆனால் அதில் வந்த லாபத்தை ஏன் குழுவினர்களுக்கு பிரித்துக் கொடுத்தீர்கள்??? என்று கேட்டார். இதைத்தொடர்ந்து அவர் ரஜினிகாந்த் எனக்கென்று அதை செய்து கொடுக்கவில்லை. நம்முடன் சேர்ந்து 15 பேர் உள்ளனர். இத்தனை வருடங்களாக நம்முடன் சேர்ந்து வேலை செய்கின்றனர். இந்த படம் இல்லாமல்  சும்மா இருக்கும் நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு எந்த வருமானமும் இல்லாமல் போகும்!! எனவே அவர்களின் வாழ்க்கை தரத்திற்காகவே ஒரு படம் செய்ய வேண்டும் என்று கேட்டேன் உடனே சம்மதித்து ரஜினி நடித்துக் கொடுத்தார் என்கின்றார் முத்துராமன்.

மேலும் பாண்டியன் திரைப்படம் வெளியாகும் மூன்று நாட்களுக்கு முன்னதாக எனது மனைவி இறந்து விட்ட போதும் படம் வெளியிடுவது தள்ளிப்போனால் எவ்வளவு நஷ்டம் ஆகும் என்பதை யோசித்துப் பார்த்து தான் ரஜினி கூட தள்ளிப் போட்டுக் கொள்ளலாம் என்று சொன்னபோதும் குறித்த தேதிக்குள் அந்த படத்தினை முடித்து வெளியீடு செய்தோம்!! மேலும் அந்த திரைப்படத்தில் வந்த லாபத்தினை நாங்கள் அனைவரும் பங்கு செய்து கொண்டோம்!!! என்று கூறினார் முத்துராமன்! இந்த வீடியோ தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது மேலும் இது மாதிரி இன்னும் எத்தனை உதவிகளை அதில் செய்திருக்கிறார் என்று பலரும் சூப்பர் ஸ்டாரை பற்றி புகழ்ந்து பேசி வருகின்றனர்.