Cinema

விஜய் வீட்டு முன்னாடி ஆடி பாடிய த்ரிஷா!! அடுத்த பகீர் கிளப்பிய சுசித்ரா...

TRISHA, SUCHITRA
TRISHA, SUCHITRA

ரேடியோவில் ஆர் ஜே, பத்திரிக்கையாளர் மற்றும் பின்னணி பாடகராக இருந்து வந்த சுசித்ரா கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற விவகாரத்தில் பெரும் சர்ச்சையை சந்தித்தார். அதற்குப் பிறகு அமைதியாக எங்கு சென்றார் என்பது கூட தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தனியார் youtube சேனல் மற்றும் பத்திரிகை நிறுவனங்களுக்கு பேட்டி கொடுத்து பகீர் கிளப்பி வருகிறார். அதாவது சுஜி லீக்ஸ் சினி பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை எனது ஐடியை பயன்படுத்தி வெளியிட சொன்னது தனது முன்னாள் கணவர் கார்த்திக் என்றும் அதனை தனுஷ் மற்றும் திரிஷா உள்ளிட்டோ தான் வெளியிட்டார்கள் என்றும் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி இது மொத்தமும் பிராங்க் தான் என்றும் கூறி தனுஷ், திரிஷா மற்றும் கார்த்திக் என்ன மூன்று பேர் மீதும் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.


அதுமட்டுமின்றி தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் தன் பாலின எழுப்பாளர் என்றும் அதன் காரணமாகவே அவரை நான் உடனடியாக விவாகரத்து செய்ய முன்வந்தேன் என்றும் கூறியிருந்தார் ஆனால் இதற்கு கார்த்திக் தரப்பில், சுஜி லீக்ஸ் நடந்த சமயத்தில் சுசித்ராவிற்கு மனநலம் சரியில்லை என்றும் அதனால் அவர் அப்படி நடந்து கொண்டார் என்றும் கூறியிருந்தார். இதனை அடுத்து, நடிகை தனுஷ் மற்றும் த்ரிஷா குறித்த குற்றச்சாட்டுகளை சுசித்ரா முன்வைத்ததற்கு நான் சரியாக இருந்தாலும் இந்த உலகம் குறை கூறுகிறது உண்மையைத் திரித்து பேசுகிறது என்று நடிகை திரிஷா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு பதிலடி கொடுத்திருந்தார் . இப்படி சுசித்ராவின் கருத்திற்கு திரிசா மறைமுகமாக பதிலடி கொடுத்ததற்கு மீண்டும் ஒரு பரபரப்பான த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார் சுசித்ரா! அதாவது எலைட் வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் தங்களை ஒருவரை ஒருவர் பிராங் செய்து கொள்வதை ஒரு விளையாட்டாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அப்படி திரிஷா ஒரு முறை பார்ட்டியில் விஜய் வீட்டு முன்பு பாடி ஆடி இருந்தார் அது த்ரிஷாவிற்கு கொடுக்கப்பட்ட dare ஆகும்! நல்ல முகத்தை பொதுவெளியில் வைத்திருக்கின்ற விஜயின் வீட்டிலேயே அதிகமான பார்ட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது திரிஷா, சங்கீதா மற்றும் விஜய் 3 பேருமே அந்த பார்ட்டியில் இருந்து உள்ளார்கள் என்று தமிழ் சினிமா மற்றும் அரசியல் என இரண்டு தரப்பையும் அதிர வைக்கின்ற பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் சுசித்ரா! 

ஏற்கனவே நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமலஹாசன் கேளிக்கை விருந்து நிகழ்ச்சியின் பொழுது போதை பொருளை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதாக சுசித்ரா கூறியதற்கு  தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி உரிய நடவடிக்கை மற்றும் விசாரணைகளை இதில் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ள நிலையில் அடுத்து தமிழக வெற்றிக் கழகம் என்ற ஒரு புதிய அரசியல் கட்சியை தொடங்கி தனது அரசியல் பயணத்தில் முதல் படியை எடுத்து வைத்துள்ள விஜய் குறித்தும் இப்படி ஒரு பகிரங்க குற்றச்சாட்டை சுசித்ரா முன் வைத்துள்ளது வேறு விஜயின் அரசியல் வாழ்க்கை பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சமீப காலமாக விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தனுஷ் - ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் - சைந்தவி வரிசையில் விஜய் மற்றும் சங்கீதாவின் விவாகரத்து கூட நிகழலாம் என்ற ஒரு பேச்சு சினிமா வட்டாரங்களில் சுற்றி வருகிறது. இந்த நிலையில் விஜய் மற்றும் திரிஷாவை சம்பந்த படுத்தியும் சுசித்ரா பேசியுள்ளது சமூக வலைதளம் முழுவதும் வைரலாகி வருகிறது.