Cinema

ஏன் "அண்ணாமலை" நடித்த திரைபடத்தின் முன்னோட்டம் நேற்று வெளியாகவில்லை என்ன நடந்தது?

annamalai
annamalai

தமிழக பாஜா தலைவர் அண்ணாமலை கன்னட படம் ஒன்றில் நடித்த செய்தி குறித்து நேற்று நாம்  செய்தி வெளியிட்டு இருந்தோம் அந்த தகவல் பெரும் வைரலாக பரவிய நிலையில், பல்வேறு முன்னணி ஊடகங்களும் அண்ணாமலை நடித்த அரபி படம் பற்றி செய்தி வெளியிட தொடங்கின, இந்த சூழலில் நேற்று மாலை 4 மணிக்கு வெளியாக இருந்த அரபி படத்தின் முன்னோட்ட காட்சி வெளியிட்டப்படாமல் தள்ளி போனது.ஏன் என்ன நடந்தது என பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர் அதற்கு விடை கிடைத்துள்ளது.


சர்வதேச புகழ்பெற்ற, 'பாரா' நீச்சல் வீரர் கே.எஸ்.விஸ்வாஸ் 29 வயதான இவர் பயிற்சி பெற்ற நடனக் கலைஞராகவும் உள்ளார்.இவர் 10 வயதில், மின் விபத்தில் இரண்டு கைகளையும் இழந்தார் மின் விபத்தில் இருந்து விஸ்வாஸை காப்பாற்ற சென்ற அவரது தந்தை உயிரிழந்தார்.

கடந்த, 2009ல் தாயையும் இழந்த விஸ்வாஸ், நீண்ட கால பயிற்சி மற்றும் நம்பிக்கையால், தொழில் முறை நீச்சல் வீரராக மாறினார். இந்தியாவுக்காக, பல பதக்கங்களையும் பெற்றுள்ளார்.கன்னட இயக்குனர் ராஜ்குமார், விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை படமாக, அரபி என்ற பெயரில் படமாக்கி உள்ளார்.

இதில் தற்போதைய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார். இப்படத்திற்காக, அவர் 1 ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார். படத்தின் கதையை கேட்டதுமே, நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றியவர் என்ற அடிப்படையில் கன்னடம் நன்றாக தெரியும் என்பதால் அண்ணாமலையும் நடித்து கொடுத்துள்ளார்.

படத்தில் அண்ணாமலை நடித்து இருக்கிறார் என்ற காரணத்தால் கர்நாடகத்தில் பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது இதனால் படத்தின் ட்ரைலரில் அண்ணாமலை இடம்பெறும் காட்சிகளை சேர்க்கவும், அண்ணாமலையை வைத்தே டப்பிங் பணிகளை முடிக்க படக்குழு முடிவு எடுத்து இருப்பதால் நேற்று வெளியாக இருந்த அரபி படத்தின் முன்னோட்டம் வெளியாகவில்லை என அரபி படக்குழு தரப்பை தொடர்பு கொண்ட போது TNNEWS24-டம் தெரிவித்து இருக்கின்றனர்.நேற்றைய  பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணாமலையும் இது குறித்து பதில் அளித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.