Cinema

"விஜய் சேதுபதி" கடும் முற்றல் மோதல் வேலை செய்ய தொடங்கிய அர்ஜுன் சம்பத் அறிவிப்பு !!

vijaysethupathi
vijaysethupathi

விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு ஒரு உதைக்கு "100"  ரூபாய் கொடுக்கப்படும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் அறிவித்து இருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


நடிகர் விஜய் சேதுபதியை பயணி ஒருவர் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானது இதையடித்து அந்த செய்தி ஊடகங்களில் முக்கிய செய்தியாக வெளியானது, தேசிய ஊடகங்களிலும் எதிரொலித்தது இந்த சூழலில்  தன்னை தாக்கியவர் மீது விஜய் சேதுபதியோ அவரது உதவியாளரோ எந்தவித புகாரும் அளிக்கவில்லை மேலும் சமரசமாக செல்ல இருப்பதாக விஜய் சேதுபதி தரப்பிலும்.,

அவரை தாக்கியவர் தரப்பிலும் தெரிவித்ததாக பெங்களூரு காவல் துறை தெரிவித்தது. இந்த சூழலில் ஏன் விஜய் சேதுபதி தாக்கப்பட்டார், தாக்கியவர் யார் என பல்வேறு ஊடகங்களும் திசைக்கு ஒரு செய்தியை வெளியிட்டன, தற்போது அந்த செய்தி தாக்கியவர் மூலம் வெளிவந்துள்ளது, குறிப்பாக தனியார் யூடுப் சேனல் நேர்காணல் ஒன்றில்.,

மகா காந்தி என்ற நபர் நான் தான் விஜய் சேதுபதியை அடித்தேன், என்னை தாக்கியதால் அடித்தேன் நாட்டை பற்றி தவறாக பேசினார் மேலும் தேவர் திருமகனார் குறித்தும் சர்ச்சையாக பேசியதால் அடித்தேன் என மகா காந்தி தெரிவித்தார், இதையடுத்து கடும் சர்ச்சை வெடித்தது, விஜய் சேதுபதி வீட்டை முற்றுகை இடப்போவதாக தேவர் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன.

விஜய் சேதுபதி வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கபட்டது., இந்த சூழலில் இந்து மக்கள் கட்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தேவர் அய்யாவை இழிவுபடுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ.1,001 வழங்கப்படும் என அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளார். விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்கும் வரை அவரை உதைப்பவருக்கு ஒரு உதைக்கு 1001 வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும் அக்கட்சி வெளியிட்டுள்ள மேலும் மற்றொரு பதிவில், இது வரை விஜய் சேதுபதி எந்த விளக்கமும் அளிக்காததால் விஜய் சேதுபதிக்கு இந்த எச்சரிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியை எட்டி மிதிக்கும் ஒவ்வொரு அடிக்கும் 1001 ரூபாய் என அர்ஜுன் சம்பத் அறிவித்து இருப்பது.

விஜய் சேதுபதி தரப்பிற்கும் அர்ஜுன் சம்பத் ஆதாரவாளர்களுக்கும் இடையே கடும் முற்றல் மோதலை உண்டாக்கியுள்ளது. விஜய் சேதுபதி குறித்து  மகா காந்தி தெரிவித்த குற்றசாட்டு குறித்து எந்த ஊடகமும் வாய் திரைக்கதை நிலையில் தற்போது அர்ஜுன் சம்பத் அறிவிப்பின் மூலம் விஜய் சேதுபதி என்ன செய்தார் என்ன பேசினார் என்ற தகவல் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது ,இதன் மூலம் மக்களுக்கு விஜய் சேதுபதி குறித்த தகவல் தெரியவந்துள்ளதாகவும் அர்ஜுன் சம்பத் நோக்கம் நிறைவேறியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .