Cinema

ஒரே மேடையில் தல தளபதி..? ரஜினிகாந்தின் ரியாக்சன் செம்ம..!

Vikranth, Vshinu Vishal, Rjinikanth
Vikranth, Vshinu Vishal, Rjinikanth

ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் ஆடியோ வெளியீடு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட படக்குழுவினர் நடிகர் அஜித் குறித்தும் விஜய் குறித்தும் பேசியது விழாவில் இருந்தவர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. 


சினிமாவில் பெண்களுக்கான இயக்குனர்கள் வரிசையில் முன்னணியில் இருந்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவர் நடிகர் தனுஷை வைத்து மூன்று மற்றும் வை ராஜா வை படத்தை இயக்கியிருந்தார். முதல் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தாலும் இரண்டாவதாக வந்த வைராஜா வை படம் பெரியதாக பேசப்படவில்லை. அதன் பிறகு ஐஸ்வர்யா தனுஷ் திருமன வாழ்கை பரஸ்பரமாக செல்லாததால் இருவரும் பிரிந்தனர். அதில் இருந்து படம் இயக்குவதை ஓரம் தள்ளி இருந்தார். இது நடிகர் ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் மகன்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

சினிமாவிற்கு சிறிய கேப் விட்ட ஐஸ்வர்யா தொடர்ந்து விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் அப்பா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரை வைத்து அவர் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இதன் இசை வெளியிட்டு விழா கோலாகலமாக நடைபெற்றதில், இதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் விஷ்ணு விஷாலிடம் ஒரு கிரிக்கெட் அணிக்கு கோச்சாக நீங்கள் எந்த நடிகரை நியமிப்பீர்கள் என்கிற கேள்வி எழ, அவர் உடனே அஜித் குமார் என சொன்னதுமே லால் சலாம் ஆடியோ லான்ச் அரங்கமே தல என்கிற கோஷத்துடன் அஜித் குமார் என கத்த தொடங்கி விட்டனர். சமீபத்தில், வெள்ள பாதிப்பில் விஷ்ணு விஷால் சிக்கிய நிலையில், அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷாலுக்கு கிளப் ஹவுஸ்க்கு செல்ல வாகனத்தை அஜித் ஏற்பாடு செய்து கொடுத்தார் என்றும் அதற்கு நன்றி என்றும் விஷ்ணு விஷால் பதிவிட்டு இருந்தார்.

தளபதி விஜய்யின் தம்பி உறவுமுறையான விக்ராந்த்திடம் அதே போன்ற கேள்வியை எழுப்ப அவர் உடனே விஜய் தான் என்னோட டீம் கோச் என அதிரடியாக சொல்லி விட்டார். விஜயின் பெயர் சொன்னதும் மொத்த ஆடியன்ஸுக்கு தல, தளபதி என்று கோஷம் எழுப்பினர். இரு நடிகர்களும் மேடையில் ரஜினி முன்னே அஜித், விஜய் பெயர் சொன்னதும் ரஜினி சிரித்து கொண்டே கடந்து சென்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக ரசிகர்கள் சண்டை போடுவதை தவிர்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேடையில் இருந்து கீழே இரங்குபோது நாங்கள் இருவரும் ரஜினி சார் படத்தில் நாங்க இருக்கிறோம் என்பதே எங்களுக்கு கிடைத்த பாக்கியம் என மகிழ்ச்சியடைந்தனர்.