Technology

வருகின்ற ஜூன் 3ம் தேதி நடக்க இருக்கும் அதிசயம்!!! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க!!

space
space

விண்வெளி என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரும் அப்படி என்னதான் இருக்கிறது அந்த விண்வெளியில் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வம் கொள்கின்றனர். மேலும் எப்போதாவது கோள்களில் ஏதேனும் மாற்றம் ஏற்படும் பொழுது செய்திகள் வெளியானது உடன் அனைவருமே அந்த மாற்றத்தை பார்க்க வேண்டும் என்று ஆர்வம் கொள்கின்றனர். சில நாட்களில் திடீரென்று சில கோள்கள் சாதாரணமாக மனிதர்கள் கண்ணில் பார்க்கும் பொழுது தென்படுகிறது என்ற செய்திகளும் வெளியாகும். மேலும் ஒரு சில குறிப்பிட்ட நாட்களில் சந்திரன் போன்ற கோள்கள் தனது நிறத்திலோ அல்லது வடிவத்திலோ ஒரு சில மாற்றங்களுடன் காணப்படும். 


இதுபோன்ற செய்திகளும் அடிக்கடி வெளியாகி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. பொதுவாக விண்வெளி என்றாலே இந்த அளவில் தான் இருக்கும் என்று நம்மால் எளிதில் சொல்லி விட முடியாது!! நாம் நினைப்பதை விட விண்வெளி என்பது மிகப் பெரிய அளவில் தான் இருக்கும். மேலும் விண்வெளியில் என்ன மாதிரியான வசதிகள் இருக்கும்?? அங்கு மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கிறதா?? என பல ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடந்து கொண்டே தான் உள்ளது. மேலும் நேரடியாக கூட விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி இதற்கான ஆராய்ச்சிகளும் மேற்கொண்டு நடத்தப்பட்ட தான் வருகிறது. என்றாலும் கூட இன்றளவும் கூட விண்வெளி என்றாலே அனைவருக்கும் ஒரு ஆர்வம் ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவும், அதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் அதிகரித்தே தான் வருகிறது.

இன்று விண்வெளியை ஆராய்ச்சி செய்வதற்கு என்று அதிக அளவில் டெக்னாலஜியும், பல மையங்களும் அமைக்கப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் கூட சந்திராயன் 3 நிலவின் தென் துருவத்தில் இறங்கி இந்தியாவிற்கு மேலும் பெருமை சேர்த்தது. இந்த நிலையில் சூரிய குடும்பத்தில் இருக்கும் ஆறு கோள்கள் விரைவில் நேர்கோட்டில் வர இருக்கிறது என்று செய்திகள் வெளியாகி வருகிறது. அது குறித்து விரிவாக காணலாம்!!வருகின்ற ஜூன் 3ம் சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் சூரிய குடும்பத்தில் இருக்கும் எட்டு கோள்களில் புதன், செவ்வாய், வியாழன், சனி, யூரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கிரகங்களும் நேர்கோட்டில் வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இதுபோன்ற அதிசயமான நிகழ்வு நடக்கப் போகிறது என்று செய்திகள் வெளியாகியதை தொடர்ந்து மக்கள் அனைவரும் அவற்றை பார்க்க வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகின்றனர்.மேலும் இந்த நிகழ்வானது அடுத்த வாரத்தில் இருந்தே தொடங்கிவிடும் என்றும் சரியாக ஆறு கிரகங்களையும் பார்க்க வேண்டும் என்றால் ஜூன் 3ம் தேதி பார்க்கலாம் என்றும் கூறியுள்ளனர். மேலும் இவற்றில் சனி, வியாழன், புதன் மற்றும் செவ்வாய் ஆகிய 4 கோள்களை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்றும், மீதமுள்ள இரண்டு கோள்களை தொலைநோக்கி மூலம் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளனர்.மேலும் இவற்றை ஒளி மாசுபாடு குறைவாக உள்ள இடத்திலும், கடற்கரை மற்றும் பூங்கா போன்ற திறந்தவெளிகளிலும் இருந்து பார்த்தால் மிகவும் நன்றாக தெரியும் என்று கூறி வருகின்றன.

பொதுவாக விண்வெளியில் சின்ன மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட அவற்றை காண வேண்டும் என்று சாதாரண மக்கள் கூட அதிகம் ஆர்வம் கொள்வார்கள்.இந்த நிலையில் தற்பொழுது சூரிய குடும்பத்தில் உள்ள ஆறு கோள்கள் நேர்கோட்டில் வரும் எனவும் அவற்றை வெறும் கண்ணிலேயே பார்க்க முடியும் என்றும் செய்திகள் வெளியாகிறது தொடர்ந்து  அனைவரும் அவற்றை பார்க்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் அனைத்து ராசிக்காரர்களும் பரிகாரம் செய்யவேண்டுமா என  ஜோதிடர்களிடம் கேட்டசமயம் அதல்லாம் வேண்டாம் வேண்டுமானால் திருப்திக்காக கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்தால் போதுமானது என கூறிவிட்டனர்...