Cinema

ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஹீரோவாக இருந்து வில்லனாக மாறி தற்போது இந்த இடத்திலும் கால் வைக்க போகிறாரா...?

ACTOR ARJUN
ACTOR ARJUN

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் இயக்குனராகவும் இருந்து வருபவர் தான் அர்ஜுன்!! இவர் முதன் முதலில் கன்னட மொழியில் ஹீரோவாக அறிமுகமாகி மிகவும் பிரபலமான ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு தமிழில் ஹீரோவாக பல ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து சண்டை காட்சிகளில் சூப்பராக ஆக்டிங் செய்து அதிக அளவில் ரசிகர்களை பெற்றார். இவரின் திரைப்படங்களில் சண்டைக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து வந்ததால் அனைவரும் இவரை ஆக்ஷன் கிங் என்று செல்லமாக அழைத்தனர். 


90களில் இருந்து ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சமீப காலமாகவே வில்லன் ரோல்களில் அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்திலும் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு வில்லன் ரோலில் சூப்பராக நடித்து ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்பொழுது அஜித்துடன் இணைந்து விடா முயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தற்பொழுது நடிகர் அர்ஜுன்  நடிப்பில் விருந்து மற்றும் தீயவர்கள் குலைகள் நடுங்க போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் ஜீ தமிழில் சர்வைவர் என்ற நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வந்தார்.

என்னதான் சினிமாவில் நடிப்பது போன்ற வேலைகளில் பிஸியாக இருந்தாலும் கூட குடும்பத்தில் அதிகமாக அக்கறை கொண்ட ஒருவராக அர்ஜுன் இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அர்ஜூனுடைய மூத்த மகளான ஐஸ்வர்யா அர்ஜூன் திருமணமானது மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தது. ஐஸ்வர்யா அர்ஜுன் திரைப்படங்களில் சைடு ரோல்களில் நடித்து வரும் தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமாவில் இருக்கும் பல பிரபலமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மிகவும் விமர்சியாக கொண்டாடப்பட்டது. 

மேலும் இவர்களின் திருமண மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ட்ரெண்டாகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் அர்ஜூன் கூடிய சீக்கிரம் சீரியலில் கால் பதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் அர்ஜுன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சீரியல் ஒன்றை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அர்ஜுன் தயாரிக்கப் போகும் சீரியல் ஆனது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அர்ஜூன் இருந்து வந்த நிலையில் தற்பொழுது இவர் தயாரிக்கப் போகும் சீரியலும் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என்று செய்திகள் பரவி  வருகிறது. ஏற்கனவே சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பலரும் வாய்ப்புகள் கிடைத்து சினிமாவில் நடித்து வருகின்றனர்.

மேலும் வெள்ளித்திரையில் இருக்கும் சில நடிகர்கள் சில சீரியல்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருவதை பார்க்க முடிகிறது. வெள்ளித்திரைகளில் வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரைக்கு வந்து சின்ன ரோல்களில் நடித்து வரும் பல நடிகர்கள் இன்று இருந்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளி திரையில் பிரபல நடிகராக இருந்து ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து தற்போது நெகட்டிவ் ரோல்களில் சூப்பராக கலக்கி வரும் ஆக்சன் கிங் சீரியலில் நுழையப்போவது குறித்த செய்தி தற்பொழுது வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த சீரியலில் நடிக்க போகும் நடிகை மற்றும் நடிகைகள் யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தி தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.