Cinema

என்னது சாபமா? நாகர்ச்சுனா குடும்பத்தில் யாருமே முதல் மனைவியுடன் வாழ்வது இல்லையா? ஏன் என்ன காரணம்?

Latest tamil
Latest tamil

நடிகர் நாகார்ச்சுனா குடும்பம் தெலுங்கு திரையுலகில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குடும்பங்களில் ஒன்று இருப்பினும் அவர்களது குடும்பத்தின் மீது விழுந்த சாபமா அல்லது அவர்களே தேடி கொள்வது அப்படியா என்ற சூழல் தான் நிலவுகிறது.


தெலுங்குத் திரையுலகத்தில் தனித்துவமான இமேஜுடன் தனது வாழ்க்கைப் பயணத்தை நடத்தியவர் மறைந்த நடிகர் அக்கினேனி ஏ.நாகேஸ்வரராவ். அவர் மீதும் அவருடைய படங்கள் மீதும், அவரது குடும்பத்தின் மீதும் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு எப்போதுமே தனி மரியாதை உண்டு. அதே சமயம் அக்கினேனி குடும்பத்தில் உள்ள பலருக்கும் அவர்களது முதல் திருமணம் வெற்றிகரமாக அமையாமல் விவாகரத்தில் முடிந்ததுதான் அதிர்ச்சி கலந்த உண்மை.

நாகேஸ்வரராவின் மகன் தான் நடிகர் நாகார்ஜுனா, பிரபல தயாரிப்பாளர் டி.ராமாநாயுடுவின் மகளும், நடிகர் வெங்கடேஷின் சகோதரியுமான லட்சுமியை முதல் திருமணம் செய்து கொண்டார். நடிகை அமலா மீது காதல் வந்ததும் லட்சுமியை விவகாரத்து செய்துவிட்டார் எனவே இவர்களின் முதல் திருமணமும் விவகாரத்தில் முடிந்தது.

அடுத்தது நாகார்ஜுனா, லட்சுமி தம்பதியினரின் மூத்தமகன் தான் நாக சைதன்யா. நடிகை சமந்தாவைக் காதலித்து மணம் புரிந்து அவரை விட்டுப் பிரிவதாக தற்போது அறிவித்துள்ளார் எனவே இவர்களின் முதல் திருமணமும் முடிவிற்கு வந்துள்ளது.இதை விட இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் நாகார்ஜுனா, அமலா தம்பதியினருக்கு பிறந்தமகன் அகில் இவரும் தெலுங்கில் நாயனாக வலம் வருகிறார்,இவருக்கும் ஷ்ரியா பூபால் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், திருமணம் செய்து கொள்ளாமல் அதை ரத்து செய்துவிட்டனர். தந்தைக்கும் அண்ணனுக்கும் திருமணம் நடந்து விவாகரத்து ஆனது என்றால் இவருக்கோ திருமணம் ஆகாமலே திருமண வரன் முடிவிற்கு வந்துள்ளது.

சரி நாகர்சுனாவின் குடும்பத்திற்குதான் இந்த நிலை என்றால் அவரது தங்கை குடும்பத்தையும் அந்த சாபம் விட்டுவைக்கவில்லை, நாகார்ஜுனாவின் சகோதரி மகன் நடிகர் சுமந்த். இவருக்கும் நடிகை கீர்த்தி ரெட்டிக்கும் திருமணம் நடந்தது. ஆனால், இரண்டு வருடத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டனர்.

சுமந்த் சகோதரி சுப்ரியா. இவருக்கும், 'இஷ்டம்' என்ற தெலுங்குப் படத்தில் நாயகனாக அறிமுகமான சரண் டோட்லா என்பவருக்கும் திருமணம் நடந்தது. பின்னர் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.  இப்படி நாகார்ச்சுனா குடும்பத்தில் அனைவருக்குமே முதல் திருமணம் விவகாரத்தில் முடிவது அந்த குடும்பத்தின் மீது விழுந்த சாபமாக பார்க்க படுகிறது பொருளாதாரத்தில் வலிமையாக இருப்பதால் விவாகரத்து என்பது திரை பிரபலங்களுக்கு சாதாரணம் என்பதால் எளிதாக கடந்து செல்கின்றனர்.