Cinema

விஜய் மகனுக்கு உதவி செய்த அஜித்குமார்..!

Ajith, Sanjay
Ajith, Sanjay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர் தளபதி விஜய் நாளைய தீர்ப்பு படத்தில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். தற்போது சினிமாவில் இருந்து அரசியல் வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்திருக்கும் தளபதி விஜய் அரசியல், சினிமா என்று பிசியாக இருக்கும் வேலையில் விஜயின் மகனுக்கு உதவிகளை முன் வந்து செய்துள்ளார் நடிகர் அஜித்குமார். 


ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இருவர்களில் யார் முதலில் என்ற போட்டி நிலவியது போல் தற்போது விஜய் மற்றும் அஜித் இருவர் ரசிகர்களுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இரு நடிகர்களும் இதை கண்டுகொள்ளாமல் தனது படத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தளபதியின் மகன் சஞ்சய் விஜயுடன் இணைந்து போக்கிரி படத்தில் வசந்த முல்லை பாடலிலும் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலிலும் சில காட்சிகளில் நடித்திருப்பார். அதன் பிறகு சினிமா பக்கம் எட்டி பார்க்காமல் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

வெளிநாடுகளில் சினிமா தொடர்பான படிப்பை முடித்து சென்னை வந்தவுடன் கையோடு கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்க விருப்பப்பட்டு கதையை தேர்வு செய்து படத்தை இயக்க முன் வந்துள்ளார். அந்த படத்திற்கு பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்துடன் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பாக ஒப்பந்தம் இட்டனர். அந்த ஒப்பந்தத்தின் போது விஜய் கலந்து கொள்ளாதது ஏன் எதனால் கலந்துகொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்தது. சினிமாவை சேர்ந்தவர்கள் விஜய் வந்திருந்தால் அவர் மூலம் புரமோஷன் ஏற்பட்டிருக்கும் அவர் வளர்த்து விட்டார் என்ற பேச்சு வரும் அதனால் தான் கலந்துகொள்ளவில்லை என பேசப்பட்டது.

இதற்கிடையில், விஜய்க்கும் அவரது மனைவிக்கும் சிறு பிரச்சனை காரணமாக தனியாக வாழ்வதாகவும் அவரது மகன் அம்மாவுடன் இருப்பதால் தான் விஜய் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என பேச்சுக்கள் எழுந்தது. இது ஒருபக்கம் இருக்க விஜய் மகன் இயக்க இருக்கும் படத்திற்கு விளம்பரதாரராக யாரை தேர்வு செய்யலாம் என்று பார்த்தபோது பிரபல விளம்பரத்துவரான சுரேஷ் சந்திராவை தேர்ந்தெடுத்துள்ளனர். முதலில் சஞ்சய் இயக்கும் படத்திற்கு  PRO-வாக இருப்பது என முதலில் சுரேஷ் சந்திரா தயங்கியுள்ளார். இவர்கள் நடிகர் அஜித்துடன் பரிந்துரைத்துள்ளனர் அப்போது அஜித் தயங்காமல் 'தாராளமாக போய் பண்ணுங்க' என கூறினாராம்.

அதுமட்டுமில்லாமல் சுரேஷ் சந்திராவிடம் விஜயின் மகன் தொலைபேசி எண்களை கேட்டு கொண்டு சஞ்சயிடம் தொடர்பு கொண்டு அறிமுக படத்திற்காக தனது வாழ்த்துக்களையும் சஞ்சய்யிடம் கூறினாராம் அஜித்.சஞ்சய்யின் படம் அறிவிப்பு வெளிவந்தபின் விஜய் இதுவரை தனது சமூக வலைத்தளத்திலோ, அல்லது வேறு நிகழ்ச்சிகளிலோ பேசவில்லை. இதனால் சினிமாவில் தனது கெரியரை துவங்கும், தனது மகனுக்கு விஜய் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லையே என சர்ச்சை எழுந்தது. அவர் இயக்கும் படத்தில் யார் நடிகர்? யார் நடிகை? எண்டபத்து குறித்து எந்த வித தகவலும் வெளியாகவில்லை. 

தனது மகன் இயக்கும் படத்திற்கு இதுவரை வாழ்த்தோ அல்லது அது குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால், அஜித் முன் வந்தது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இணயத்தில் விஜய் ரசிகர்களும் அஜித்திற்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர். விஜய் அரசியலில் தனது கவனத்தை முழுமையாக செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.