Cinema

ச்சீ! விஜய், சூர்யா கொஞ்சம் கூட இறக்கம் இல்லாத மனிதர்களா?...திரை துறையில் வெடித்த பூகம்பம்!

Vijay, Surya
Vijay, Surya

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் நடிப்பின் நாயகன் சூர்யா இவர்கள் இருவரும் தற்போது சினிமாவில் கலக்கி வருகின்றனர். இவர்கள் இருவர்களில் சினிமாவை தாண்டி மக்களுக்கு நல்லது செய்வதில் நடிகர் சூர்யா வள்ளல் என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் சினிமாவில் நுழைந்ததும் பெரிய அவமானத்தை சந்தித்தனர், அப்போது அவர்களை தன்னுடன் நடித்து அவர்களை மீண்டும் மக்கள் இடத்தில் பெயரை வாங்கி கொடுத்தவரை கண்டுகொள்ளாமல் இருப்பது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.


சிவகுமார் மூலம் சூர்யாவும், சந்திரசேகர் மூலம் விஜயும் தனது தந்தை மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தனர். இருவருக்கும் தற்போது பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இந்நிலையில் இருவரின் படங்கள் வெளியானால் அசால்ட்டாக கோடி கணக்கில் வசூல் குவிக்கும் என்பதில் மாற்றமில்லை. அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நடிகர் விஜய் என  கூறிய நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் அதற்கு எதிர்ப்பு கிளப்பினர். சூர்யாவை அடுத்த உலக நாயகன் என்று கூறி வருகின்றனர் இந்த விவகாரம் எங்கு போய் நிற்கும் என தெரியவில்லை. இப்படி பட்டவர்கள் தற்போது அவர்கள் ரசிகர்களே அவர்களை விமர்சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதாவது, சூர்யா கங்குவா படத்திலும், விஜய் தளபதி 68 படத்திலும் பிசியாக நடித்து வருகின்றனர். ஆனால் ஆரம்பகாலத்தில் இருவரும் சினிமாவிற்கு வந்து அவமானத்தை சந்திந்தனர். அதும் விஜய்க்கு உருவ கேலி போன்ற அவமானங்கள் ஏற்பட்டது. சூர்யாவிற்கு நடிப்பு வரவில்லை போன்று விமர்சனம் எழுந்த நிலையில் சினிமா நமக்கு செட் ஆகாது என ஓரம் சென்றார். இருவரும் சரிந்த நிலையில் அப்போது சினிமாவில் பிக்கில் இருந்தவர் கேப்டன் விஜயகாந்த் அதனால் விஜயை அவருடன் நடிக வைத்தால் மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கும் என்று விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் விஜயகாந்துடன் பேசி சம்மதிக்க வைத்தாராம். இதற்கு விஜயகாந்த் தம்பிக்காக இதைக்கூட செய்யமாட்டேனான் என சொல்லி செந்தூர பாண்டி படத்தில் நடித்தார்.

அந்தப் படமும் சூப்பர் ஹிட்டாகி விஜய்யை மேலும் அடையாளப்படுத்தியது. அதே போல் நடிகர் சூர்யாவிற்கும் அவரது தந்தை சிவகுமார் பெரியண்ணா படத்தில் சூர்யாவைக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்ட தன் பேரில், அந்த படத்திற்கும் விஜயகாந்த் ஓகே சொல்ல அந்த படமும் சரியான ஹிட் கொடுத்து அதிலுள்ள பாடலுக்கும் வியாஜயகாந்த் பாடலாசிரியர் வாய்ப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர் விஜயகாந்த் அவர் கிட்டத்தட்ட 5 வருடங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். விஜய், சூர்யா நேரில் இதுவரை சந்தித்து நலம் விசாரித்தது கூட இல்லை என கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல் நிலை பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையிலும், அவருக்கு இன்னும் சில வாரங்கள் சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவமனை கூறியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அந்த நடிகர்கள் இதுவரை நலம் விசாரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. விஜய், சூர்யா ஏன் இப்படி இருக்கிறார் தனக்கு உதவியவருக்கு சிறு நன்றியுடன் கூடவா இருக்கக்கூடாது என அரசியல் வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் கேள்வி முன் வைக்கப்படுகிறது.