Cinema

தளபதிக்கு செம்ம கோவம் வரும் புஸ்ஸி ஆனந்த் பளீர் தகவல்.. கலாய்த்து வரும் நெட்டிசன்கள்..!

Bussy Anand, Vijay
Bussy Anand, Vijay

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது பார்பபரப்பாக பேசிவந்தனர். இரண்டு மூன்று நாட்கள் பரபரப்பாக பேசப்பட்டு வந்தநிலையில் அது அப்படியே ஆப் செய்யப்பட்ட்டது. விஜயை ஓரம் கட்டிவிட்டனர் என்றே சொல்லலாம். காரணம் விஜய் இரண்டு வருடம் அரசியலுக்கு விடுமுறை கொடுத்ததே காரணமாக இருக்கும் அவ்ளோதான் விஜயின் அரசியல் பரபரப்பு என கூறப்பட்டது. இந்நிலையில் புஸ்ஸி ஆனந்த் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் தீனியாக பரவி வருகிறது.


விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான லியோ படம் கலவையான விமர்சனம் பெற்றது, தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக நடிகர் விஜய் திடீரென்று அறிவித்து பரபரப்பை ஏற்பபடுத்தினார். ஆனால், இப்போது அந்த பரபரப்பு குறைந்து விட்டது. இளைஞர்கள் ஓட்டுக்களை விஜய் வெகுவாக கவருவார் இது சில கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டது. ஆனால், அரசியல் விமர்சகர்கள் இரண்டு ஆண்டு கட்சி விடுமுறை கொடுத்தது விஜய் மட்டுமே என கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் விஜய் இயக்கத்தில் தலைமை நிர்வாகியாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் விஜய் குறித்து யூடூப்பில் பேசியது வைரலாகி வருகிறது. விஜய்க்கு கடன் வாங்கி செலவு செய்வது என்பது பிடிக்காது. யாரவது கடன் வாங்கி ஒரு விஷயத்தை செய்தார்கள் என கேள்விப்பட்டால் அவருக்கு பயங்கரமான கோபம் வரும். தன் ரசிகர் ஒருவர் கடன் வாங்கி படத்திற்கு டிக்கெட் வாங்குவது, பால் அபிஷேகம், பேனர் போஸ்டர் ஓட்டுவது போன்ற விஷயங்களை விஜய் விரும்பமாட்டார். அதுபோல ஏதேனும் விஷயம் நடந்ததாக தெரிந்தால் எங்களை கூப்பிட்டு திட்டுவார். இதுபோல இனிமேல் நடக்கக்கூடாது என்பார். விஜய் பார்க்கத்தான் அமைதியாக இருப்பார், ஆனால் இதுபோன்ற விஷயங்கள் நடந்தால் செம கோபமான ஆளாக மாறிவிடுவார் என்றார் புஸ்ஸி ஆனந்த்.

மேலும், மதுரையில் ரசிகர் ஒருவர் விஜய் படம் வெளியானபோது கையில் பிளேடுகளை கொண்டு கிழித்தது தொடர்பான வீடியோ வெளியானது. அதனை பார்த்து உடனே எனக்கு தொலைபேசியில் அழைத்து இது தெரியுமா என கேட்டார். நான் தெரியாது என்று சொன்னதும் என்னை திட்டி யார் என்று விசாரியுங்கள் உயிருக்கு எதாவது ஆனால் என்ன செய்வது என கடித்து கொண்டார் என்றார். விஜய் ரொம்பவும் கோவப்படக்கூடியவர் என  புஸ்ஸி ஆனந்த் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் தளபதி மக்கள் மீது பாசம் கொண்டவர் என கமெண்ட் பதிவிட்டு விஜயை எல்லோரும் அரசியலுக்கு முக்கியம் பேச்சு திறன் என்கிறீர்கள் அதனை விஜய் நிச்சயம் சமாளித்து சென்று முதல்வர் இருக்கைக்கு செல்வார் என கருத்துக்களை தெரிவிக்கின்றனர். 

நெட்டிசன்கள், விஜய்க்கு பைக்கில் படம் ஆடியோ வெளியிட்டு விழா நடந்த போது ரசிகர்கள் அடிபட்டு  வந்தது தெரியாத என கேள்வியை முன்வைத்து, எதாவது பேசி பிரபலமாக்க நினைக்கக்கூடாது என கூறுகின்றனர். விஜய் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார் அந்த படத்திற்கான புரமோஷன் நடக்கும்போது ரசிகர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிந்து அதில் கலந்து கொள்ளாமல் இருப்பாரா? இல்லை நிகழ்ச்சி வேண்டாம் என கூறுவாரா? என் கேள்வி வைக்கின்றனர். எதாவது பேசி படத்திற்கு புரமோஷன் செய்ய வேண்டாம் என்று புஸ்ஸி ஆனந்தை கலாய்த்து வருகிறார்கள்.