Cinema

பிரபலத்தின் மகளுக்கு இரண்டாவது திருமணம்... பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ishwarya Shankar
ishwarya Shankar

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்துடன் வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். இவருக்கு இரண்டு மகள் உள்ளனர் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கு இரண்டாவது திருமணத்திற்காக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை இரண்டாவது மகளான அதிதி ஷங்கர் தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்குளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திரை விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் முத்த திருமணம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.


சினிமாவில் எத்தனை இயக்குனர்கள் இருந்தாலும் தான் படத்தை தனி வடிவில் கொண்டு வருவார். அந்த படமும் மிக பெரிய வெற்றி பெரும் தான் படித்த மெக்கானிக்கல் படிப்பை கொண்டு சினிமாவில் படத்தை இயக்கிவருகிறார். அந்த வகையில், எந்திரன், ஐ போன்ற படங்களில் தனது டெக்னாலஜியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மிக பெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில், ஷங்கர் தற்போது கமல்ஹாசனை கொண்டு பான் இந்திய படமாக இந்தியன் 2 பாகத்தை இயக்கிவருகிறார். அதேபோல் தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படத்தை இயக்கிவருகிறார் இரண்டு படங்களும் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது. இரண்டு படமும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ஷங்கர் புதுச்சேரியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரோகித் என்பவருடன் கொரோன காலத்தில் திருமணம் நடைபெற்றது. எல்லாத்திலும் பிரமாண்டத்தை பார்க்கும் ஷங்கர் கொரோன காலம் என்பதால் அப்போது அந்த திருமணம் தெரிந்தவர்களை மட்டும் அழைத்து திருமணம் நடைபெற்றது. சென்னையில் திருமண வரவேற்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. ஆனால், ரோகித் கைது செய்யப்பட்டதால், வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவில்லை. இது அவரது குடும்பத்திற்கு கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இரண்டவது திருமணம் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்நிலையில், ஐஸ்வர்யா ஷங்கரின் இரண்டாம் திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். புதுச்சேரி கிரிக்கெட் அணியில் ரஞ்சி கோப்பைக்காக விளையாடும் கிரிக்கெட் வீரர் ரோகித் ரொம்ப வசதியான குடும்பம் இவர்களின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதையடுத்து, இயக்குநர் ஷங்கர் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் தான்,கிரிக்கெட் கிளப்பில் பயிற்சியாளர் தாமரைக் கண்ணன் என்பவர் 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரியவருகிறது. கிரிக்கெட் கிளப் கேப்டன் தாமோதரனின் மகனான ரோகித் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழும் போலீஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் ரோகித் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு சம்பந்தமாக ரோகித் சிக்காமல் இருக்க அப்போது சங்கர் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். ஆனால், போக்சோ சட்டம் என்பதால், நிலைமை கை மீறி போய்விட்டது. ஷங்கரின் மகள் இனி அவருடன் வழமாட்டேன் என சொல்லி விவாகரத்து பெற்றுள்ளார். தற்போது, ஷங்கர் தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்வதற்கான வேலையை பார்த்து இருக்கிறார். இவர்களின் நிச்சயதார்த்த போட்டோ தற்போது வெளியாகி இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அதற்கு நெட்டிசன்கள் இரண்டாவது திருமணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சினிமாவில்க் இருப்பவர்கள் இரண்டாவது திருமணம் செய்பது என்பது புதியதல்ல என்றும் கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.