Cinema

சீண்டிய நபர் பொதுவெளியில் இழுத்துவிட்ட சின்மயி...!

chinmayi, vairamuthu
chinmayi, vairamuthu

தென்னிந்திய திரை உலகில் முதன்மை பின்னணி பாடகியாக வலம்வருபவர் சின்மயி, தனது வாழ்க்கையில் பல துறைகளில் சாதனை படைத்து வருகிறார் ஒரு பின்னணி குரல் கொடுக்கும் கலைஞர், இசையமைப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், ரேடியோ ஜாக்கி அனைத்தையும் தாண்டி ஒரு தொழில் முனைவராகவும் வலம் வருகிறார். இவர் பாடிய பாடல்கள் எந்த அளவிற்கு ட்ரெண்டிங்கில் சென்றதோ அதே அளவிற்கு இவரால் ஏற்பட்ட சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. முதன் முதலில் பாடகி சின்மயின் சர்ச்சை சம்பவம் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய் அவரை விட்டுப் பிரிந்து செல்வதாக அறிவித்த முடிவை ஆதரித்து இவர் பதிவிட்ட ஒரு பதிவு பவன் கல்யாணி ரசிகர்கள் மத்தியில் கோபத்தைக் ஏற்படுத்தி அவர்களின் ரோலுக்கு ஆளானார். அதற்கு பிறகு வைரமுத்துவின் மீ டு பிரச்சனை தான்!


அதாவது 2005 - 2006 களில் நடந்த சம்பவமாக இலங்கை தமிழர்களுக்காக 'வீழமாட்டோம்' என்ற ஒரு ஆல்பத்தில் பாடும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட சின்மயி வைரமுத்து தன்னை தவறாக அழைத்து ஒத்துழைக்கும் படி கூறியதாகவும் இல்லையென்றால் இந்த தொழிலிலே இருக்க முடியாது என்று வைரமுத்து மிரட்டியதாகவும், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இவரைத் தொடர்ந்து பெங்களூருவை சேர்ந்த பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் என்பவரும் வைரமுத்துவிற்கு எதிராக அவர் மீது குற்றம் சாட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதற்குப் பிறகு ஹாஸ்டாக் மீட் டூ என நாட்டின் பல பகுதிகளில் இருந்து பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து பதிவு செய்தது பெரும் சர்ச்சையாக எழுந்து. ஆனால் சின்யியின் குற்றச்சாட்டை வைரமுத்து புறக்கணித்ததோடு அநாகரிகமான அவதூறுகள் தற்போது நாடெங்கும் நாகரீகம் ஆகி வருகிறது சமீப காலமாக நான் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன், அவற்றில் இதுவும் ஒன்று,  உண்மைக்கு புறம்பாக தெரிவிக்கப்படும் எதையும் நான் பொருட்படுத்துவதில்லை காலம் உண்மையை சொல்லும் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். 

 இதற்கு பிறகு வாடகை தாய் விவகாரமும் சின்மயியின் சர்ச்சை பட்டியலில் சேர்ந்தது. அதற்கு முன்பாக வைரமுத்து குற்றாசட்டை மறுத்ததற்கு சின்மயி, வைரமுத்து இரக்கமில்லாமல் மற்றவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தபவர் இதனை நான் சாகும்வரை தெரிவித்துக் கொண்டே இருப்பேன் என்று தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இவருக்கு பல நடிகை, நடிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் சின்மயிடம் ஒருவர் தன்னுடன் தனியாக இருக்க தயாரா எனவும் அதற்காக பணம் தருவதாகவும் கேட்டுள்ளார். இதனை சின்மயி ஸ்கிரீன் ஷாட் எடுத்து பொதுவெளியில் பகிர்ந்துள்ளார். மேலும் 'மனித சதையின் சில துண்டுகளை ஒருவர் ஏன் உண்மையில் நம்பக்கூடாது என்பதற்கான கண்காட்சி. நான் பதிலளிக்கவில்லை என்றும் இந்த வகையான மனிதனின் மோசமான சூழ்நிலை, தன்னை வேண்டாம் என்று சொல்லும் சிறுமிகளைக் கொலை செய்வதுதான்' என்று பதிவிட்டுள்ளார். அதற்கு பிறகு ‘ஓ இல்லை இல்லை. உண்மையில் எனது இன்ஸ்டா பக்கத்தில் pervs of Insta என்ற தலைப்பில் ஹைலைட் உள்ளது. இந்த மாதிரி ஒரு மருத்துவர்’ என்று மற்றும் ஒரு பதிவையும் பதிவிட்டு அதில் ஒருவரின் புகைப்படத்தையும் பகிர்ந்து உள்ளார். கடைசியாக வாடகை தாய் விவகாரம், வைரமுத்து மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டு விவகாரம் தற்போது தான் அடங்கி இருக்கும் நிலையில் மீண்டும் இப்படி ஒரு பதிவை ஆதாரத்துடன் அவர் பதிவிட்டிருப்பது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.