Cinema

இயக்குனர் பாலா என்னை அடித்தார் ...குற்றசாட்டு வைத்த நடிகை...!

Mamitha Baiju, Bala
Mamitha Baiju, Bala

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் வணங்கான். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார் . தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இறுதி கட்டத்தை நோக்கி நகரும் படப்பிடிப்பு தற்போது நடிகை மமிதா பைஜூ இயக்குனர் பாலா மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது நெட்டிசன்களிடம் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது .


தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலா ஈயக்கத்தில் அடித்த நடிகர்கள் எல்லாம் ஆரம்பத்தில் சகிப்புதன்மையுடன் இருந்தாலும், பாலாவின் படத்தில் நடித்தால் அடுத்தடுத்த படங்கள் கைகூடி வரும் என்பதில் மாற்றமில்லை. அப்படி தான் நடிகர் சூர்யா, விக்ரம் அகோயோர் இணைந்து நடித்த படம் பிதாமகன் இந்த படத்தை தொடர்ந்து இருவருக்கும் பட வாய்ப்புகள் வந்தது இப்பொது உச்ச நட்சத்திரமாக இருக்கின்றனர். நடிப்பில் மாற்றம் வேண்டுமென்றால் நிச்சயம் பாலா படத்தில் நடிப்பதன் மூலம் மாற்றம் ஏற்ப்படும். இந்த வரிசையில் அதர்வா, ஆர்யா ஆகியோர் வளர்த்துள்ளனர். 

இந்த நிலையில், சினிமாவில் முகம் காட்டாமல் இருந்த இயக்குனர் பாலா, சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை இயக்க சூர்யாவும் ஒப்புக்கொண்டார். சூர்யா நடித்து படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படியான நிலையில் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகினார். நடிகர்களை மரியாதைக் குறைவாக நடத்தியதால் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் விளைவாக சூர்யா இப்படத்தில் இருந்து விலகியாதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு பல்வேறு விமர்சனம் வந்தது. அதாவது, சூர்யாவுக்கு எதிராக பேச்சுக்கள் ஐந் வண்ணம் இருந்தது சூர்யா தற்போது பாலிவுட் வரை சென்றுள்ளார் அவரை வைத்து இன்னும் இது போன்ற படம் எடுப்பதால் அவர் விலகியிருக்கலாம் என கூறப்பட்டது.

நடிகர் சூர்யாவை தொடர்ந்து, மலையாள நடிகை மமிதா பைஜூவும் இப்படத்தில் இருந்து விலகினார். இவர் நடிப்பில் மலையாளத்தில் பிரேமலு என்ற படம் வெளியானது. இதன் புரமோஷனில் கலந்துகொண்ட அவர், பாலா மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஒரு காட்சியில் வில்லடிச்சான் பாட்டில் நான் நடிக்க வேண்டும். ஆனால் எனக்கு சரியாக வரவில்லை. இதனால் மூன்று டேக்குகள் சென்றது. அதனால் சில சமயம் இயக்குனர் பாலா என் பின்னால் இருந்து முதுகில் அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் படப்பிடிப்பு சமயத்தில் தான் கோபமானால் அதை படப்பிடிப்பு முடிந்ததும் மறந்துவிட வேண்டும் எனவும் பாலா கூறியதாக மமீதா தெரிவித்தார்.

ஏற்கனவே இயக்குனர் பாலாவுடன் இணைந்து பணியாற்றி இருந்ததால் படப்பிடிப்பில் எப்படி இருப்பார் என்பதை சூர்யா சார் தெரிந்து வைத்து இருந்தார். நான் தான் அந்த செட்டுக்கு புதிது எனவும் தெரிவித்து இருக்கிறார். பல ஆண்டுகள் கழித்தும் இன்னும் நடிகர் நடிகை மெது கைவைப்பது என்பது விமர்சனத்திற்குள்ளானது. இதனால் நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உள்ளனர் ஆரம்பத்தில் தான் நீங்கள் நடிப்பு வரவில்லை என்றால் அடித்து சொல்லி கொடுப்பீர்கள் இன்னும் அதையே பின்பற்றவது என்பது தற்போது உள்ள நடிகர்கள், நடிகைகள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.