Cinema

வடிவேலு என்னெல்லாம் செஞ்சிருக்காரு தெரியுமா..? பிரபல நடிகையின் ஆதங்கம்...!

Vadivelu, Aarthi
Vadivelu, Aarthi

தமிழ் சினிமாவில் வைகை புயல் என கொடி கட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு, வைகைப்புயல் வடிவேலு ஒரு காலத்தில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தார். இவர் மீது அடுக்கடுக்கான குற்றசாகட்டுகள் வந்தபோது ரசிகர்கள் வடிவேலு மீது அந்த குற்றச்சாட்டு வராமல் கொடி பிடித்தனர். இந்நிலையில் தற்போது வடிவேலு மீது நடிகர்களை தொடர்ந்து நடிகை ஒருவர் சரமாரியாக விமர்சனம் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வடிவேலு எல்லோரிடமும் இப்படி தான் பழகுவரோ என்ற நிலை அதிகரித்துள்ளது.


ஒரு காலத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு, சமீபத்தில் விஜயகாந்த் இறந்த போது மொத்த திரையுலகமும் அஞ்சலி செலுத்திய போது இவர் மட்டும் கலந்து கொள்ளாதது விமர்சனமாக மாறியது. தற்போது வடிவேலு குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். முன்னாடி வடிவேலுக்கு பின்னல் பெரிய நடிகர்கள் இருப்பார்களாம் அவர்கள் வடிவேலுவை நம்பி தான் படத்தில் ஓகே சொல்லுவார்கலாம் ஆனால், வடிவேலு பின்னல் தற்போது அப்படி ஒரு பட்டாளம் இல்லை என்பதை பார்க்க முடிகிறது. வடிவேலுவுடன் பல படத்தில் நடித்த நடிகர்கள் வடிவேலுவின் உண்மை முகத்தை பலமுறை நிகழ்ச்சிகளில் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நகைச்சுவை நடிகை ஆர்த்தியும் வடிவேலுவை பற்றி ஒரு பேட்டியில் கூறியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு படத்தில் நன்றாக நடித்துக் கொண்டிருப்பாராம். அந்த சீன் எல்லாம் முடிந்த பிறகு வடிவேலு ஆர்த்தியை அழைத்து ‘செல்லம் செமயா இருந்துச்சு. நல்லா பண்ணிட்ட’ என மனதார பாராட்டுவாராம். ஆனால் படத்தில் அந்த சீனே இருக்காதாம். தன்னை விட நன்றாக ஒரு காமெடி நடிகர் நடித்துவிட்டால் படத்தில் அந்த சீனே இல்லாமல் செய்து விடுவாராம் வடிவேலு. இதை போல ஒரு படத்திற்கான ஆர்த்தியின் கணவர் கணேஷ் மேக்கப் எல்லாம் போட்டு தயாராக இருந்தாராம். சிறிது நேரத்தில் டைரக்டர் வந்து உங்க கேரக்டருக்கு வடிவேலு வேறொரு நடிகரை நடிக்க அழைத்து வந்துவிட்டார் என கூறி அனுப்பி விட்டார்களாம்.

அதே போல் 24 ஆம் புலிகேசி படத்திற்காக கோவை சரளாவையும் ஆர்த்தியையும் கமிட் செய்திருக்கிறார் சிம்புதேவன். ஆனால் ‘அவர்கள் எல்லாம் பார்த்த மூஞ்சிகள்’ என வடிவேலு சொன்னதின் பேரில் அந்தப் படத்தில் இருந்து சரளாவையும் ஆர்த்தியையும் விலக்கி விட்டார்களாம். ஆனால் அந்த படம் கடைசியில் டேக் ஆஃப் ஆகவே இல்லை என ஆர்த்தி கூறினார். மேலும், ‘எங்க மூஞ்சி பார்த்த மூஞ்சினா இப்போ வடிவேலுவை பார்க்கவே பல வருடங்கள் ஆகிவிட்டதே. இதெல்லாம் கர்மாதான். பாம்புனா கொத்ததான் செய்யும். அதை மாற்றவே முடியாது. எல்லாம் ஓகேனு போய்கிட்டே இருக்கனும்’ என கூறினார்.

வடிவேலு தன்னுடன் நடித்த நடிகர்கள் மறைவுக்கு வடிவேலு செல்லாமல் இருப்பது சர்ச்சையாக உள்ளது. விஜயகாந்த் மறைந்த பிறகு வடிவேலு செல்லாததால் தொடர்ந்து விமர்சனம் வந்தது. இந்நிலையில வடிவேலு மீது நடிகை ஆர்த்தியும் கூறியுள்ளது சர்ச்சையாக உள்ளது. வடிவேலுடன் நிறைய படத்தில் நடிகை ஆர்த்தி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.