Cinema

விஜய் அரசியல் வாழ்கை குறித்து பிரபல நடிகர் அதிரடி!

Bayilvan Ranganatha, Vijay
Bayilvan Ranganatha, Vijay

சினிமாவில் உள்ள நடிகர்கள் அரசியல் பின்னனியில் அவர்களது பயணம் தொடரும் என்பதில் மாற்றம் இல்லை. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சுமார் ஆறு வருடங்களாக அரசியலில் இறங்குவதாக கூறிய நிலையில், கடைசியில் அரசியல் வாழ்கையில் இருந்து விலகினார். அதன் பின் சூப்பர்ஸ்டாருக்கு அடுத்தபடியாக உள்ள கமல்ஹாசன் கட்சியை தொடங்கினார் அவர் மீது விமர்சனமும் அடுக்கடுக்காக வந்தது. அரசியல் கட்சியில் உள்ளவர்கள் சினிமாவில் நடிப்பதும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதும் என விமர்சனம் வந்தது. தற்போது விஜய் மீது பிரபல திரைவிமர்சகர் சரமாரியாக விமர்சித்துள்ளார்.


நடிகர் விஜய் பல ஆண்டுகளாக அரசியல் ஆசையில் இருந்து வருகிறார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என பெயர் மாற்றி தனிக் கொடியையும் அறிமுகம் செய்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவாக பணியாற்றியது. அதன் பிறகு அரசியலில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளவில்லை. சினிமாவில் கவனம் செலுத்தி வந்த விஜய் சினிமா மூலம் வரும் லாபத்தை அதிகரிக்க தொடங்கினார். தற்போது சினிமாவில் ரஜினிகாந்த்க்கு அடுத்த இடத்தில் உள்ள விஜய் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கலிலும் வெளிநாடுகளிலும் தனக்கென்று ஏராளமான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். 

தனக்குள்ள ஆதரவை வலுப்படுத்த அரசியலில் மீண்டும் முழுமையாக குதித்துள்ளார். கடந்த சில மாதங்களாக விஜய் ரசிகர்கள் மன்றம் சார்பாக மாணவர்களு உதவி செய்வது என தொடங்கினார். சில நாட்களுக்கு முன்பு விஜய் தனது மன்ற மூத்த தலைவர்களுடன் பனையூரில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார் அதில் சில பொறுப்புகளும் வழங்கியதாக தகவல் வந்தது. 2025ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பும் வெளியானது. விஜய் அரசியலுக்கு வருகிறார் என்று அறிவித்ததும் தமிழகத்தில் உள்ள பாஜக, அதிமுக, நாம் தமிழர் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

ஆரம்பத்தில் இருந்தே விஜய் உடன் பயணித்தவர் புஸ்ஸி ஆனந்த் இவர் மக்கள் மன்ற பொறுப்பாளராக இருப்பவர். விஜய்யின் அரசியல் தொடர்பான அத்தனை நடவடிக்கைகளும் இவரின் மேற்பார்வையில்தான் நடந்து வருகிறது. இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தவர் ஆவார். புஸ்ஸி ஆனந்த் மீது தொடேன்ற்து விமர்சனம்  வந்தது வெல்ல பாதிப்பின் பொது விஜய் போட்டோவை கையில் வைத்து கொண்டு வந்தது மற்றும் மன்ற நிர்வாகிகளுடன் கடுமையாக நடந்து கொள்ளுவது. நிர்வாகிகளுடன் கடிந்து கொள்வது என விமர்சனம் வந்தது. 

இந்நிலையில், விஜயின் அரசியல் வரவு குறித்து ஊடகம் ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன் ‘விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என முடிவெடுத்துவிட்டால் மக்களோடு பயணிக்க வேண்டாம். பனையூரில் ரகசிய கூட்டம் போட்டு பேசுவதெல்லாம் வேலைக்கு ஆவாது. அவருக்கு என்ன கொள்கை இருக்கிறது என்றே தெரியவில்லை. பலரிடமும் அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசிக்க வேண்டும். ரஜினியே அதை செய்தார். ஆனால், வரவில்லை என சொல்லி விட்டார். அதிருப்தி ஓட்டுக்களை விஜய் அறுவடை செய்வார் என சொல்ல முடியாது. அவருடன் இருக்கும் புஸ்ஸி ஆனந்த ஒரு அடி முட்டாள். ரசிகர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதே அவருக்கு தெரியாது. அவரையெல்லாம் உடன் வைத்துக்கொண்டு விஜயால் பெரிதாக சாதிக்க முடியாது.

விஜய் படங்களில் நடிப்பதை நிறுத்தமாட்டார். 200 கோடி சம்பளத்தை யார் வேண்டாம் என சொல்வார்?.. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட வாய்ப்பு இல்லை. அவர் கட்சி ஆரம்பித்தாலும் மக்களிடம் வரவேற்பு இருக்கும் என் சொல்ல முடியாது. மக்கள் பிரச்சனையை பேசாமல் யாரும் மக்கள் தலைவராக மாற முடியாது’ என அவர் தெரிவித்தார். இதற்கு ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதனை சரமாரியாக திட்டி வருகின்றனர்.