Cinema

தமிழர்களை கொச்சை படுத்திய நடிகை... சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியா?

Dhanya Balakrishna, Rajinikanth
Dhanya Balakrishna, Rajinikanth

பெங்களுரில் இருந்து வந்து தமிழ் திரையுலகில் பயணத்தை தொடங்கிய நடிகை தான்யா பாலகிருஷ்ணன் தமிழில் நடிகைகளுக்கு துணை நடிகையாக நடித்திருக்கிறார். இவர் சுமக்க வலைத்தளமான ட்விட்டரில் செய்திகளை வெளியிட்டு தமிழ் உணர்வுகளை புண்படுத்தியதாக இரு மாநிலங்களுக்கு இடையே ஒரு "பிரச்சினை" ஆகிவிட்டது. இந்த பதிவு போட்டு ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது இதனை மீண்டும் கிளறியுள்ளார் பிரபல திரை விமர்சகர் ப்ளு சட்டை மாறன். 


சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு என இரண்டு அணிகளும் மோதியது. அதில் சென்னை அணி வெற்றி பெற்றால் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும். அதன் படி சென்னை அணியும் வெற்றி பெற்று பிளே-ஆஃப் நுழைந்தது. இது தொடர்பாக நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் வெற்றியை பதிவு செய்து வந்தனர். அப்போது பெங்களூருவை சேர்ந்த நடிகை தான்யா பாலகிருஷ்ணன் பல ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்சனையை குறிப்பிட்டு இணையத்தில், "அன்புள்ள சென்னையே, நாங்கள் கொடுக்கும் தண்ணீரை நீங்கள் பிச்சை எடுக்கிறீர்கள், மின்சாரத்தை நீங்கள் கெஞ்சுகிறீர்கள், நாங்கள் தருகிறோம்! உங்கள் மக்கள் வந்து எங்கள் அழகான நகரத்தை ஆக்கிரமித்து, கொச்சைப் படுத்துகிறீர்கள், நாங்கள் அனுமதிக்கிறோம், இப்போது ப்ளேஆஃப்களுக்குச் செல்ல எங்கள் தயவில் நீங்கள் இருக்கிறோம், இப்படி நீங்கள் கெஞ்சுகிறீர்கள் நாங்கள் தருகிறோம்!"  என பதிவிட்டிருந்தார்.

இவற்றின் பதிவு இணையத்தில் வைரலானதால் இவருக்கு எதிராக HateDhanya எனும் ஹாஷ்டாக் ட்ரெண்டிங் ஆனதால்... கடுப்பான இவர் 'இனி தமிழ்ப்படங்களில் நடிக்கவே மாட்டேன்' என சபதம் போட்டார். தமிழ் திரையுலகில் ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, ராஜா ராணி போன்ற சில தமிழ்ப்படங்களில் நடித்தார். வாயை மூடி பேசவும், மாரி போன்ற படங்களை இயக்கிய பாலாஜி மோகனை திருமணம் செய்து கொண்டார். இப்போது எதற்காக இவரை பற்றி பேசுகிறோம் என்றால் அப்போது தமிழில் நடிக மாட்டேன் என சொன்ன இவர் சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்து நடித்துள்ளதால் திரைவிமர்சகர் ப்ளு சட்டை மாறன் ரசிர்கர்களுக்கு நினைவு படுத்தியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் சிறப்பு தோற்றத்தில் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் நடித்த படம் லால் சலாம் இதில் விக்ராந்த், விஷால் இருவரும் நடிகர்களாக. நடித்துள்ளனர் இந்த படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இதில் நாயகியாக தான்யா பாலகிருஷ்ணன் தான் நடித்துள்ளார். அதில் யாருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறித்த தகவல் இல்லை. இந்நிலையில் தமிழ் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என ஒதுங்கிய தான்யா பாலகிருஷ்ணன் தமிழா நடித்தது காரணம் என்ன? இது தொடர்பாக திரை விமர்சகர் ப்ளு சட்டை மாறன் இணையத்தில், எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது.. தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று கூறிய  இவரை ஹீரோயினாக நடிக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா. இதற்கு ரஜினியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

தலைவரை சங்கி இல்லையென்று கூறிய ஐஸ்வர்யா... இதற்கு என்ன பதில் கூறுவார்? சினிமா ரசிகர்களே... உங்கள் வேலை... இந்த படத்தை சூப்பர் ஹிட் ஆக்குவது மட்டுமே. மற்றபடி வேறு எந்த கேள்வியும் கேட்காதீர்கள். என பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்களோ எங்கு சென்றாலும் வந்தாரை வாழ வைப்பது தமிழர்களே எனவும் இவர் கடந்த ஆண்டே தமிழில் நடித்துள்ளார் அப்போது நீங்கள் எங்கே கோமாவில் இருந்திர்களா என விமர்சனம் செய்து வருகின்றனர். ஏழாம் அறிவு படத்திற்கு பிறகு இவர் இலங்கை வாழ் தமிழர்களை கொச்சையாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.