Cinema

பிரஷரால் தலைவலியில் சுற்றும் ஞானவேல் ராஜா... சூப்பர் ஸ்டார் படம் அக்டோபர் பத்துல வராதாம்!!

GNANAVEL RAJA, RAJNIKANTH
GNANAVEL RAJA, RAJNIKANTH

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கண்டது ஜெயிலரில் சூப்பர் ஸ்டார் தனது ஸ்டைல் மற்றும் நடிப்பில் மீண்டும் ஒரு மாஸ் ஹீரோவாக என்ட்ரி கொடுத்ததாகவும் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல் அனைத்தும் இன்ச் பை இன்ஜாக இந்த படத்தில் செதுக்கப்பட்டிருக்கிறது சூப்பர் ஸ்டாருக்காகவே எடுக்கப்பட்ட இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாகவும் தரமாகவும் உள்ளது என்று பல பாராட்டுகள் இப்படத்தை இயக்கிய நெல்சனுக்கு குவிந்தது. முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது இந்த படம் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பையே பூர்த்தி செய்யாததால் நெல்சன் திலிப் குமார் கடும் சரிவை அந்த காலகட்டத்தில் சந்தித்தார் மேலும் பொது நிகழ்ச்சிகள் மற்றும் விருது விழாக்களில் கூட நெல்சனிற்கு நடந்த சில மரியாதையற்ற செயல்கள் பெருமளவில் சர்ச்சையானது.


இதனை அடுத்து சூப்பர் ஸ்டாரை வைத்து ஜெயிலர் என்ற திரைப்படத்தை மாஸாக எடுத்து மீண்டும் சூப்பர் ஸ்டாரை பாக்ஸ் ஆபிஸ் கிங்காக அமர வைத்தார் நெல்சன் திலீப் குமார். ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் வைத்து ஞானவேல் ராஜா இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது மேலும் நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் 170 வது திரைப்படமாகும். அதனால் இந்த திரைப்படம் ஜெயிலர் திரைப்படத்தை விட மிகவும் பிரம்மாண்டமாகவும் மாஸ்ஸாகவும் இருக்கும் என்றும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் நடிகர்கள் அமிதாபச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பலர் நடித்திருக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்தை ஏற்கனவே ஜெயிலர் திரைப்படத்தில் இசையமைத்த அனிருத் தான் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க, வேட்டையன் என தலைப்பிடப்பட்டுள்ளது சூப்பர் ஸ்டார் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் வேட்டையன் திரைப்படத்தை முழுக்க முழுக்க பெரும் இழுத்து இழுத்து இழுபறிக்குள்ளாக்கி இயக்குனர் ஞானவேல் இழுத்ததாகவும், இதனால் ரஜினியை கடுப்பாகி தனது போஷனை விரைவில் முடித்துக் கொள்ள வேண்டும் என்று கட்டன் ரைட் ஆக கூறிவிட்டதாகவும் அதனால் ஞானவேல் ராஜா சூப்பர் ஸ்டாரின் போஷனைமெல்லாம் வேகமாக முடித்துவிட்டு அனுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பிற நடிகர்களின் காட்சிகளை படபிடிப்பதிலும் தொடர்ந்து இழுபறி ஆகிடுவதாகவும் இதனால் ஷெட்யூல் பிரச்சினைகள் மற்றும் கால்சீட் பிரச்சனைகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 

அதுமட்டுமின்றி லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் பெருமளவிலான அடியை வாங்கியுள்ளதால் லைக்கா நிறுவனம் எப்படியாவது வேட்டையன் திரைப்படத்தில் நல்ல வசூலை பெற வேண்டும் என்ற வேகத்தில் ஞானவேல் ராஜாவிடம் வேகமாக இந்த படத்தை முடிக்க பிரஷர் செய்வதாகவும் மறுபக்கம் அஜித் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கின்ற முயற்சி திரைப்படத்தின் தேதிகளும் இன்னும் குறிக்கப்படவில்லை என்பதால் லைக்கா நிறுவனத்தின் பிரஷர் முழுவதும் ஞானவேல் ராஜா மீது விழுக, ஞானவேல் ராஜா இந்த படத்தை எப்படி முடிப்பது என்று திணறி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அக்டோபர் பத்தாம் தேதி வேட்டையன் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிப்புகள் வெளியான நிலையில் திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் தாமதமாகலாம் என்றும் கூறப்படுகிறது.