Cinema

இப்படி ஒரு சம்பவமா கீர்த்தி சுரேஷ் லைஃப்ல.....? வெளிவந்த உண்மை.....

keerthi suresh
keerthi suresh

சென்னையில் வசித்து வந்த சுரேஷ்குமார் மேனகா ஆகிய இருவருக்கும் மகளான கீர்த்தி சுரேஷ் 2000 ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கீதாஞ்சலி படத்தின் மூலம் மோகன்லால் உடன் அடித்து மலையாள திரை உலகில் நல்ல அறிமுகத்தை பெற்றார். சினிமா பின்புறத்தை கொண்ட கீர்த்தி சுரேஷ் 2015 ஆம் ஆண்டிலிருந்து தனது சினிமா பயணத்தில் கவனம் செலுத்தி தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இருப்பினும் அவருக்கு தமிழில் ஒரு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது ரஜினி முருகன் மற்றும் ரெமோ உள்ளிட்ட படங்களே! அதற்குப் பிறகு பல படங்களில் நடிக்க ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகரான விஜய்யுடனும் இரண்டு முறை ஜோடி சேர்ந்து நடித்தார். மேலும் தற்பொழுது இவர் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது இதனை தொடர்ந்து சைரன், ரகு தாத்தா, ரிவால்வோ ரீட்டா, கண்ணிவெடி ஆகிய படங்களையும் வரிசையாக நடித்து படு பிஸியாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 


இப்படி முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம் போன்றவர்களுடன் ஜோடியாக நடித்து கமர்சியலாக நல்ல வரவேற்பையும் தனது ரசிகர்கள் பட்டாளத்தையும் பெருக்கிக் கொண்டு வரும் கீர்த்தி சுரேஷிற்கு தற்போது பாலிவுட் கதவுகளும் திறந்து தயாராகியுள்ளது. அதாவது தமிழில் அட்லி தயாரிப்பில் வெளியான தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் என்ற படத்தை ஹிந்தியில் அட்லி தயாரிக்க உள்ளார். அந்த படத்தில் வருண் தவானிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சைரன் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து பிப்ரவரி 16ஆம் தேதி ரிலீஸ் ஆவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. மேலும் அதன் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கீர்த்தி சுரேஷ் பல youtube சேனல் மற்றும் தனியார் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து வருகிறார் அந்த வகையில் ஒரு பேட்டியில் தன் வாழ்க்கையில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளது தற்பொழுது இணையங்களில் வைரல் ஆகி உள்ளது. 

அதாவது தன் தோழியுடன் இரவு சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது குடிபோதையில் ஒரு வாலிபர் அருகில் வந்து கீர்த்தி சுரேஷின் மேல் கை போட்டதாகவும் அதற்கு கீர்த்தி சுரேஷ் அந்த வாலிபரை அறைந்ததாகவும் கூறினார் தன்னிடம் தவறாக நடந்த வாலிபனை அடித்து விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்ற கீர்த்தி சுரேஷின் தலையில் அந்த குடிகாரர் பலமாக தாக்கி விட்டு அங்கிருந்து ஓடியுள்ளார் சிறிது நேரத்திற்கு என்னவென்று தெரியாதமல் இருந்த கீர்த்தி சுரேஷ் தப்பித்து ஓடுவது போல் அந்த குடிகாரன் ஓடியதை பார்த்தவுடன் கீர்த்தி சுரேஷும் அவரது தோழியும் இணைந்து தலையில் தாக்கி விட்டு ஓடிய அந்த குடிகாரனை விரட்டி பிடித்து அருகில் இருந்த போலீஸ் பூத்தில் நடந்தவற்றை கூறி அந்த குடிகாரனையும் ஒப்படைத்துவிட்டு அங்கே இருந்து சென்றார்களாம். கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வை கீர்த்தி சுரேஷ் தற்போது குறிப்பிட்டு இருந்தாலும் அது இணையங்களில் வைரலாகி உள்ளது. முன்னதாக கீர்த்தி சுரேஷின் திருமண வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தகவல்களும் அவ்வப்போது வெளியாகி அவை அனைத்தும் கிசுகிசுக்கள் என்ற வகையில் தவறான தகவல் என செய்திகள் வெளியாவது வாடிக்கையாகி வருகிறது